/* */

நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்க புதிய கண்டுபிடிப்பு: ஐஐடி மண்டி விஞ்ஞானிகள் சாதனை

இந்த புதிய மூலக்கூறு கணையம் இன்சுலினை வெளியேற்றும் தூண்டும் தன்மை கொண்டது , நீரிழிவு நோய்க்கான மருந்தாக பயன்படுத்தலாம்

HIGHLIGHTS

நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்க புதிய கண்டுபிடிப்பு: ஐஐடி மண்டி  விஞ்ஞானிகள் சாதனை
X

இமாசலப்பிரதேச மாநிலம் மண்டியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகமான ஐஐடி-யைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், PK2 என்றழைக்கப்படும் மருந்து மூலக்கூறு ஒன்றை அடையாளம் கண்டுள்ளனர். இந்த மூலக்கூறு கணையம் இன்சுலினை வெளியேற்றும் தூண்டும் தன்மை கொண்டது என்பதால் இதனை, நீரிழிவு நோய்க்கான உட்கொள்ளும் வகை மருந்தாக பயன்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பயாலஜிக்கல் கெமிஸ்ட்ரி என்ற இதழில், இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஐஐடி மண்டியின் அடிப்படை அறிவியல் பள்ளியின் இணை பேராசிரியர் டாக்டர் ப்ரோசென்ஜித் மண்டல் இந்த ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதியுள்ளார். ஐஐடி மண்டியின் பேராசிரியர் சுப்ரதா கோஷ், புதுதில்லி பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் டாக்டர் சுனில்குமார், புவனேஷ்வரில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் டாக்டர் பூதேஷ்வர் தேஹுரி மற்றும் குவாலியரில் உள்ள மண்டல ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் டாக்டர் துர்கேஷ் குமார் துவிவேதி உள்ளிட்ட குழுவினர் இந்த ஆராய்ச்சியில் பங்கு வகித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சியின் நோக்கம் குறித்த விளக்கம் அளித்துள்ள டாக்டர் ப்ரோசென்ஜித் மண்டல், நீரிழிவு நோய்க்கு தற்போது பயன்படுத்தப்படும் மருந்துகளான எக்சனடைடு மற்றும் லிராக்லூடைட் போன்றவை ஊசி வடிவில் செலுத்தப்படுவதாக கூறினார். மேலும் இவை அதிக செலவை ஏற்படுத்துவதோடு நிலையற்றதாக உள்ளது என்றும் தெரிவித்தார். அதே வேளையில் தாங்கள் கண்டுபிடித்துள்ள புதிய வகை மருந்து குறைந்த செலவில் நிலையானதாகவும், வகை-1 மற்றும் வகை -2 நீரிழிவு நோய்களையும் குணப்படுத்தும் வலுவான திறன் கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Updated On: 4 May 2022 11:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  3. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  4. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  5. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  6. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  7. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  8. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  9. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!