/* */

வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்.. வருமான வரித்துறை சொல்வதென்ன?

வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பது குறித்து வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

HIGHLIGHTS

வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்.. வருமான வரித்துறை சொல்வதென்ன?
X

பைல் படம்

நமது நாட்டின் வருமான வரிச் சட்டத்தின்படி, வீட்டில் பணம் வைக்க குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. இருப்பினும், வருமான வரித்துறை சோதனையின்போது அதற்கான ஆதாரத்தை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியமானது.

சமீபத்தில் காங்கிரஸ் எம்பியான தீரஜ் பிரசாத் சாஹுவின் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்தினர். இந்த சோதனையின்போது ரூ.351 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யபட்டது. இதற்கு எம்பி., தீரஜ் பிரசாத் சாஹு, தனது குடும்பத்தின் மதுபான வியாபாரத்திலிருந்து வந்ததாக தெரிவித்தார்.

தீரஜ் பிரசாத் சாஹு மேலும் கூறுகையில், கடந்த கால எனது அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற நிகழ்வு நடப்பது இதுவே முதல் முறையாகும். இந்த நிகழ்வால் நான் மிகவும் வேதனை அடைந்தேன். இன்று நடப்பது எனக்கு வருத்தமளிக்கிறது. மீட்கப்பட்ட பணம் எனது நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியும். மீட்கப்பட்ட பணம் எனது மதுபான நிறுவனங்களுடன் தொடர்புடையது; அது மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் என தெரிவித்துள்ளார்.

வருமான வரி விதிகள் கூறுவது என்ன?

இந்த சோதனையின் பின்னணியில், வீட்டில் வைத்திருக்கும் பணத்தின் வரம்புகள் மற்றும் சமீபத்திய வருமான வரி விதிகளின் தாக்கங்கள் பற்றிய கேள்விகள் பலருக்கும் எழுகின்றன. வருமான வரிச் சட்டத்தின்படி, வீட்டில் சேமித்து வைத்திருக்கும் பணத்திற்கு குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. இருப்பினும், வருமான வரி சோதனையின் போது பணத்தின் ஆதாரத்தை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியமானது. கணக்கில் காட்டப்படாத நிதிகளுக்கு அபராதம் விதிக்கப்படலாம், வருமான வரி அதிகாரிகள் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்ய அதிகாரம் பெற்றுள்ளனர், இதற்காக அவர்கள் மொத்த தொகையில் 137% வரை அபராதம் விதிக்கலாம்.

கடன் அல்லது வைப்புத்தொகைக்கான ரொக்கமாக ரூ.20,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை ஏற்றுக்கொள்ள முடியாது. 50,000 ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனைகளுக்கு பான் எண்கள் கட்டாயம். மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியத்தின்படி, தனிநபர்கள் ஒரே நேரத்தில் 50,000 ரூபாய்க்கு மேல் டெபாசிட் அல்லது பணத்தை எடுப்பதற்கு பான் எண்களை வழங்க வேண்டும். இந்தியக் குடிமக்கள் ரூ. 30 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக சொத்துக்களை வாங்குவது அல்லது விற்பது அரசின் கண்காணிப்பின் கீழ் வரலாம். ஒரே நேரத்தில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் செலுத்துவது வருமான வரித்துறைக்கு தகவல் செல்ல கூடும். ஒரு வருடத்தில் ரூ.1 கோடிக்கு மேல் வங்கியில் இருந்து ரொக்கமாக எடுக்கும் நபர்கள் 2% டிடிஎஸ் செலுத்த வேண்டும்.

ஒரு வருடத்தில் 20 லட்சத்தைத் தாண்டிய ரொக்கப் பரிவர்த்தனைகளுக்கு அபராதம் விதிக்கப்படலாம், அதே சமயம் 30 லட்சத்துக்கும் அதிகமான சொத்தை வாங்குவதும் விற்பதும் விசாரணைகளைத் தூண்டலாம். கிரெடிட்-டெபிட் கார்டுகள் மூலம் ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமான பரிவர்த்தனைகளுக்குக் கட்டுப்பாடுகள் ஆகியவை அடங்கும். ஒரு நாளில் உறவினரிடமிருந்து ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாகப் பெறுவது அல்லது வேறு யாரிடமிருந்து ரூ.20,000க்கு மேல் ரொக்கமாக கடன் வாங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த விதிகளைப் புரிந்துகொள்வது சட்டரீதியான விளைவுகளைத் தவிர்ப்பதற்கும் வருமான வரி விதிகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் மிக முக்கியமானது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

Updated On: 22 Dec 2023 7:48 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  5. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  8. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு