திரிபுராவில், 828 மாணவர்களுக்கு எச்ஐவி: 47 பேர் உயிரிழப்பு

திரிபுராவில், 828 மாணவர்களுக்கு எச்ஐவி:  47 பேர் உயிரிழப்பு
X
திரிபுரா மாநிலத்தில் எச்ஐவி தொற்று நோய்க்கு 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அஅதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

எய்ட்ஸ் என்கிற எச்ஐவி தொற்றைக் குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில், இதைக் கட்டுப்படுத்த சில மருந்துகள் கண்டறிந்துள்ளனர். இந்த கொடிய நோய்ப் பாதிப்பால் பலரும் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டு வருகின்றது. ஆப்பிரிக்க போன்ற நாடுகளில் எச்ஐவி பாதிப்பின் தீவிரம் அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் இதன் பாதிப்பு புதிய வடிவம் எடுத்துள்ளது.

திரிபுராவில் கடந்த 2007 முதல் 2024 வரையிலான 17 வருட புள்ளி விவரங்களின்படி, சுமார் 828 மாணவர்கள் எச்ஐவி தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக திரிபுராவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அரசு வெளியிட்ட எக்ஸ் பதிவில், திரிபுராவில் 828 மாணவர்கள் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 47 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள பிரபலமான பல்கலைக்கழகங்களுக்கும் திரிபுராவில் இருந்து மாணவர்கள் படிக்கச் சென்றிருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவர்களைக் கண்டறிந்து மீண்டும் சொந்த மாநிலத்திற்கு திரும்புமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மாநிலத்தில் உள்ள 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் நடைபெற்ற சோதனையில் 828 மாணவர்கள் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இது குறித்து திரிபுர எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க இணை இயக்குநர் திரிபுராவில் எச்ஐவியின் ஒட்டுமொத்த சூழ்நிலையின் புள்ளிவிவர விளக்கத்தைப் பகிர்ந்து கொண்டார்.

"இதுவரை, 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போதைப்பொருளுக்கு அடிமையான மாணவர்கள் கண்டறியப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் மொத்தம் 164 சுகாதார மையங்களில் இருந்து தரவுகளை சேகரித்துள்ளோம். கிட்டத்தட்ட அறிக்கைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

மே 2024 வரை, நாங்கள் 8,729 பேரை ART (ஆன்டிரெட்ரோவைரல் தெரபி) மையங்களில் பதிவு செய்துள்ளோம். எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,674. அவர்களில் 4,570 பேர் ஆண்கள், 1,103 பேர் பெண்கள். அவர்களில் ஒரு நோயாளி மட்டுமே திருநங்கை என்று கூறினார்

எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் ஊசி மூலம் போதைப் பொருள் செலுத்திக்கொள்ளும் பழக்கம் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், குழந்தைகள் எச்.ஐ.வி-க்கு நேர்மறையாகக் கண்டறியப்பட்ட வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பெற்றோர்கள் இருவரும் அரசுப் பணியில் இருக்கும் குடும்பங்களும் உள்ளன. குழந்தைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தயங்குவார்கள், அவர்கள் தங்கள் குழந்தைகள் போதைப்பொருளுக்கு இரையாகிவிட்டனர் என்பதை அவர்கள் உணரும் நேரத்தில், அது மிகவும் தாமதமாகிவிட்டது. இந்த நிலைமை சுகாதார அதிகாரிகள் மற்றும் சமூகத் தலைவர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க கவலைகளை எழுப்பியுள்ளது,

குறிப்பு: ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சையானது எச்.ஐ.வி தொற்றை திறம்பட நிர்வகிக்கலாம் மற்றும் பரவுவதைத் தடுக்கலாம்.

Tags

Next Story