அதிகரித்து வரும் மின்தேவை, பொருளாதாரம் உயர்வதற்கான அறிகுறி: மின் அமைச்சகம்

அதிகரித்து வரும் மின்தேவை,  பொருளாதாரம் உயர்வதற்கான அறிகுறி: மின் அமைச்சகம்
X

பைல் படம்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் தேவை அதிகரித்துள்ளது என்றும் , இது பொருளாதாரம் வளர்ந்து வருவதை குறிக்கிறது என்றும் அமைச்சகம் கூறியது

மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறியதாவது, 124 பில்லியன் யூனிட் மின்சாரம் ஆகஸ்ட் 2021 இல் நுகரப்பட்டது, இது ஆகஸ்ட் 2019 இல் 106 பில்லியன் யூனிட்களை விட 20 சதவிகிதம் அதிகமாக இருந்தது. ஆகஸ்ட் முதல் தேவை அதிகரித்துள்ளது என்றாலும் நிலக்கரி பற்றாக்குறை இருந்தபோதிலும், அதிகரித்து வரும் மின்சாரத் தேவை ஒரு சாதகமான அறிகுறி. இது பொருளாதாரம் வளர்ந்து வருவதை குறிக்கிறது. அக்டோபர் 4, 2021 அன்று 1,74,000 மெகாவாட் தேவை இருந்தது. இது கடந்த ஆண்டை 15,000 மெகாவாட் அதிகம் என்று கூறினார்

சவுபாக்யா மற்றும் பிரதான் மந்திரி சஹாஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா திட்டத்தின் கீழ் 28 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளுக்கு மின் இணைப்புகளைப் பெற்றுள்ளதால் தேவை அதிகரித்து வருவதாகவும், இப்போது அவர்கள் மின்விசிறிகள், குளிரூட்டிகள், ஏர் கண்டிஷனர்கள் மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் போன்றவற்றை வாங்குவதாகவும் கூறியுள்ளது. சவுபாக்கியா திட்டத்தின் கீழ், மின்சாரம் இல்லாத அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.

பல மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறையைப் பற்றி குறிப்பிடுகையில், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நிலக்கரி எடுக்கும்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதே வறண்ட எரிபொருளின் மோசமான விநியோகத்திற்கு முக்கிய காரணம் என்று அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலக்கரி பற்றாக்குறையால் இன்னும் மின் நெருக்கடிஏற்படவில்லை எனவே தற்போது கட்டுப்பாடு தேவையில்லை. அடுத்த சில நாட்களில் நிலக்கரி உற்பத்தி தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?