Begin typing your search above and press return to search.
கோவா முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு
கோவாவில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை கோவா முதல் மந்திரி பிரமோத் சாந்த் இன்று சந்தித்தார். அப்போது கோவா வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்: "கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.