/* */

வீல்சேர் பற்றாக்குறை, மும்பை விமான நிலையத்தில் நடந்து சென்ற முதியவர் உயிரிழப்பு

நியூயார்க்கில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் வந்த 80 வயது முதியவர் மும்பை விமான நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

வீல்சேர்  பற்றாக்குறை, மும்பை விமான நிலையத்தில் நடந்து சென்ற முதியவர் உயிரிழப்பு
X

விமான நிலைய சக்கர நாற்காலி 

மும்பை விமான நிலையத்தில் சக்கர நாற்காலி தட்டுப்பாடு காரணமாக நடந்து சென்ற முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட ஏர் இந்தியா 116 விமானம் மும்பை விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை பிற்பகல் சிறிது தாமதமாக 2.10 மணியளவில் வந்தடைந்தது.

இந்த விமானத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 80 வயது முதியவர் தனது மனைவியுடன் மும்பைக்கு வந்திருந்தார். வணிக வகுப்பு இருக்கையில் பயணம் மேற்கொண்ட இருவரும், முன்னதாகவே சக்கர நாற்காலியை முன்பதிவு செய்திருந்தனர்.

ஆனால், சக்கர நாற்காலி தட்டுப்பாடு காரணமாக ஒரே ஒரு சக்கர நாற்காலி மட்டும் கிடைத்துள்ளது. அதனை மனைவிக்கு கொடுத்த முதியவர், விமானத்திலிருந்து குடியேற்ற சோதனை மையம் வரை சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், குடியேற்ற சோதனை மையம் அருகே வந்த முதியவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக விமான நிலைய ஊழியர்கள் மருத்துவமனைக்கு முதியவரை அழைத்துச் சென்ற நிலையில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருப்பவர் என அடையாளம் காணப்பட்டவர், நியூயார்க்கில் இருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் AI-116 இல் பொருளாதார வகுப்பில் பயணம் செய்தார்.

இதுகுறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் அளித்த விளக்கத்தில்கூறியுள்ளதாவது: குறிப்பிட்ட விமானத்தில் பயணம் செய்தவர்களில் 32 பேர் சக்கர நாற்காலி கேட்டிருந்தனர். ஆனால், 15 நாற்காலி மட்டுமே இருந்ததால், அடுத்த சுற்றில் அனுப்பி வைப்பதாக முதியவரிடம் தெரிவித்தோம். ஆனால், வயது மூப்பால் இருவருக்கும் உள்ள உடல் பிரச்னை காரணமாக ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டும் எனக் கருதி அவர் தனது மனைவியுடன் நடந்து சென்றார். விமான நிலைய மருத்துவரின் ஆலோசனையின்படி, அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், பயணி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மருத்துவ சான்று வைத்துள்ள பயணிகளை தவிர மற்ற பயணிகள் விமான நிலையங்களில் சக்கர நாற்காலி பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த எதிர்ப்பு காரணமாக மருத்துவ சான்று முறை நிறுத்திவைக்கப்பட்டு முதியவர்களுக்கு இலவச நாற்காலி சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நடக்க முடிந்தவர்களும் சக்கர நாற்காலியை பயன்படுத்துவதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.” என்று விமான நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மிகப் பரபரப்பான மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சக்கர நாற்காலி தட்டுப்பாட்டால் முதியவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரி தொடக்கத்தில் , கொல்கத்தாவில் விமான நிலைய ஊழியர்கள் சக்கர நாற்காலியில் இருந்த ஒரு பெண்ணை எழுந்து நிற்கச் சொன்னார்கள். விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

அவர் X இல் ஒரு பதிவில் , “நேற்று மாலை கொல்கத்தா விமான நிலையத்தில் பாதுகாப்பு அனுமதியின் போது, ​​ அதிகார் என்னை ஒரு முறை அல்ல, மூன்று முறை எழுந்து நிற்கச் சொன்னார். முதலில், என்னை எழுந்து கியோஸ்கிற்குள் இரண்டு படிகள் நடக்கச் சொன்னார். எனக்கு ஊனம் இருப்பதால் என்னால் முடியாது என்று சொன்னேன். உள்ளே, மீண்டும் என்னை நிற்கச் சொன்னாள். என்னால் முடியாது என்றேன். அதற்கு அவர் தயவுசெய்து இரண்டு நிமிடங்கள் நிற்கவும் என்றார். நான் பிறப்பிலேயே ஊனம் உள்ளவள் என்பதை மீண்டும் விளக்கினேன். இந்த பயங்கரமான பச்சாதாபம் இல்லாதது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, கோபமாக இருக்கிறது. கடந்த காலங்களிலும் சில சம்பவங்கள் உள்ளன, மேலும் அவர்களிடமிருந்து கொல்கத்தா விமான நிலையம் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது என கூறியிருந்தார்

Updated On: 16 Feb 2024 5:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு