Sonia Gandhi Announces- திமுக வழியில் காங்கிரஸ் - மகளிர் தொகை ரூ. 2,500 வழங்குவதாக சோனியா அதிரடி அறிவிப்பு

Sonia Gandhi Announces- திமுக வழியில் காங்கிரஸ் - மகளிர் தொகை ரூ. 2,500 வழங்குவதாக சோனியா அதிரடி அறிவிப்பு

Sonia Gandhi Announces- தெலுங்கானாவில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், மகளிர் தொகை ரூ. 2,500 வழங்குவதாக சோனியா காந்தி அதிரடியாக அறிவித்தார். 

Sonia Gandhi Announces- தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், மகளிர் தொகை ரூ. 2500 வழங்கப்படும் என, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அதிரடியாக அறிவித்தார்.

Sonia Gandhi Announces, women's amount Rs. 2500- தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் அருகே நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில், சோனியா காந்தி உரிமைத் தொகை உள்ளிட்ட 6 வாக்குறுதிகளை அதிரடியாக அறிவித்தார்.

தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத் அருகே துக்குகுடாவில் நடந்த தேர்தல் பொதுகூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதன் இரண்டாவது நாளான நே்று பேசிய சோனியா காந்தி, "நாங்கள் ஆறு உத்தரவாதங்களை அறிவிக்கிறோம், அவை ஒவ்வொன்றையும் நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளோம்.

மகாலட்சுமி திட்டத்தின் கீழ், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு மாதம் ரூ. 2 ஆயிரத்து 500 நிதியுதவி வழங்கப்படும். அதுமட்டுமின்றி, சமையல் எரிவாயு சிலிண்டரை 500 ரூபாய்க்கும், மாநிலம் முழுவதும் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் ஆகிய வாக்குறுதிகளை தருகிறோம். தெலுங்கானா மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவே இந்த 6 உத்தரவாதங்களை அறிவிக்கிறோம். மேலும் அவை ஒவ்வொன்றையும் நிறைவேற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.


சோனியா காந்தி (கோப்பு படம்)

சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பணிபுரியும் காங்கிரஸ் ஆட்சி தெலுங்கானாவில் அமைய வேண்டும் என்பது எனது கனவு" என்றார். மேலும், காங்கிரஸை ஆதரிக்குமாறு சோனியா காந்தி, மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, "ஒற்றுமை மற்றும் நிறுவன ஒழுக்கத்தை கட்சி தொண்டர்கள் கடைபிடிக்க வேண்டும். வரும் மாநில மற்றும் மக்களவைத் தேர்தல்களில் தனிப்பட்ட வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, எதிரிகளை முழு பலத்துடன் எதிர்கொள்ள வேண்டும்.

2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மத்தியில் பாஜகவை தோற்கடித்து, நாட்டில் மாற்று அரசாங்கத்தை அமைப்பதில் விடாமுயற்சியுடன் செயல்படுவதே கட்சியின் குறிக்கோளாக இருக்க வேண்டும்" என்றார். மோடி அரசின் மீதான கடுமையான தாக்குதலில், இது அரசியல் விளையாடுவதாகவும், அடிப்படை பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதாகவும் கார்கே குற்றம் சாட்டினார்.

மேலும் அவர்,"கட்சித் தலைவர்கள் இதுபோன்ற கவனச்சிதறல்களில் இருந்து விலகி உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். காங்கிரஸ் தலைவராக மகாத்மா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது 2024-ம் ஆண்டில் நூற்றாண்டை அடைகிறது. 2024-ம் ஆண்டில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே மகாத்மாவுக்கு மிகவும் பொருத்தமான அஞ்சலி.

தெலுங்கானாவில் இருந்து, புதிய பலத்துடனும், தெளிவான பாதையில் செல்வோம். தெலுங்கானாவில் மட்டுமின்றி, வரவிருக்கும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று, பாஜகவின் தவறான ஆட்சியால் மக்களை விடுவிப்பதற்காக, உறுதியான உறுதியுடன் இன்று ஹைதராபாத்தை விட்டு வெளியேறுகிறோம்," என்றார்.

மகளிருக்கு இலவச பஸ் பயணம், பெண்களுக்கு மாதம் உரிமைத் தொகை ஆகியவை திமுக அரசு தமிழ்நாட்டில் செயல்படுத்திய திட்டங்களாகும். இதனை திராவிட மாடலின் சாட்சிகளாக திமுக கூறும் நிலையில், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் தற்போது தெலங்கானாவிலும் கொண்டு வருவது திராவிட மாடல் பரவலாக்கப்படுவதையும், தமிழகம் முன்னுதாரணமாக திகழ்வதையும் குறிப்பதாக இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story