/* */

கெஜ்ரிவாலுக்கு சிறையில் சித்திரவதை! எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டு!

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை, திகார் சிறையில் சித்திரவதை செய்வதாக, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்

HIGHLIGHTS

கெஜ்ரிவாலுக்கு சிறையில் சித்திரவதை! எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டு!
X

டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், அம்மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அர்விந்த்கெஜ்ரிவால், கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது முதல்வர் கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் கைது செய்யப்பட்டு, உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, கடந்த சில நாள்களுக்கு முன்பு, ஆம் ஆத்மி கட்சி எம்பி-சஞ்சய் சிங், சிறையிலிருந்து விடுதலையானார்.

இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவின் பேரில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், திகார் சிறையில் சித்திரவதை செய்யப்படுவதாக எம்பி சஞ்சய் சிங் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், பெரும்பான்மையுடன், 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லியின் 2 கோடி மக்களின் முதலமைச்சரான அர்விந்த் கெஜ்ரிவால், இந்திய அரசின் உத்தரவின் பேரில், நாட்டு பிரதமரின் உத்தரவின் பேரில் சித்திரவதை செய்யப்படுகிறார்.

அவரது மன உறுதியை குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவருடைய உரிமைகள், வசதிகள் மறுக்கப்படுகின்றன. இவை அனைத்தும் வெளிப்படையாகவே செய்யப்படுகின்றன. சிறைக் கையேட்டின்படி மற்றும் சிறை விதிகள் 602, 605-ன் கீழ் யார் வேண்டுமானாலும் சிறையில் நேருக்கு நேர் சந்திக்கலாம்.

ஆனால், கெஜ்ரிவாலின் மனைவி, நோய்வாய்ப்பட்ட அவரது பெற்றோர் சிறையில் அவரைச் சந்திக்க வந்தபோது, நேருக்கு நேர் சந்திக்க முடியாது என கூறியுள்ளனர். பயங்கரமான குற்றவாளிகள் கூட சிறையில் சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆனால் 3 முறை முதல்வராக இருந்தவர், தனது மனைவியை ஜன்னல் வழியாகவே சந்திக்க அனுமதிக்கப்படுகிறார். அதுவும் இடையில் கண்ணாடி உள்ளது” என்றார்.

Updated On: 13 April 2024 11:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  4. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  5. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  6. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  7. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  8. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...