கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 12 கோடியை நெருங்கியது

கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 12 கோடியை நெருங்கியது
X

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிரான உலகின் மாபெரும் தடுப்பூசி போடும் திட்டத்தின் கீழ் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசியின் எண்ணிக்கை சுமார் 12 கோடியை எட்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,34,692 பேர் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தில்லி, சத்திஸ்கர், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், கேரளா, குஜராத், ராஜஸ்தான், ஆகிய பத்து மாநிலங்களில் அன்றாட கொரோனா புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 63,729 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 27,360 பேரும், தில்லியில் 19,486 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,26,71,220 ஆக (87.23%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,23,354 பேர் புதிதாகக் குணமடைந்துள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் 1,341 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai solutions for small business