Begin typing your search above and press return to search.
இந்தியாவில் ஒரு லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
HIGHLIGHTS
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,17,100 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 302 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,83,178 - ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் நேற்ரு ஒரே நாளில், 30,836 பேர் கொரோனாவால் குணமடைந்தனர். அதே நேரம், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,71,363 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவின் கொரோனா தொற்று உறுதியாகும் விகிதம் 7.74 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.