/* */

இந்தியாவில் கொரோனா 4-வது அலை இன்னும் வரவில்லை: ஐசிஎம்ஆர் இயக்குநர் தகவல்

இந்தியாவில் கொரோனாவின் 4-வது அலை இன்னும் உருவாகவில்லை, சில பகுதிகளில் மட்டுமே பாதிப்பு அதிகரித்துள்ளது: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இயக்குநர் டாக்டர் சமிரன் பாண்டா

HIGHLIGHTS

இந்தியாவில் கொரோனா 4-வது அலை இன்னும் வரவில்லை: ஐசிஎம்ஆர் இயக்குநர் தகவல்
X

இந்தியாவில் கொரோனாவின் 4-வது அலை இன்னும் உருவாகவில்லை, சில பகுதிகளில் மட்டுமே பாதிப்பு அதிகரித்துள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இயக்குநர் டாக்டர் சமிரன் பாண்டா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று ஆயிரத்துக்கும் கீழ் இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு 4 ஆயிரத்தை தொட்டுள்ளது. டெல்லி, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.இதனால் 4-வது அலை தொடங்கி விட்டதோ என்ற அச்ச உணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐசிஎம்ஆர் கூடுதல் இயக்குநர் டாக்டர் சமிரன் பாண்டா நேற்று கூறியதாவது: "தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. எனினும், இது குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே இது அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் பரவலாக பாதிப்பு ஏற்படவில்லை. இதுவரை கொரோனா 4-வது அலைக்கான அறிகுறி ஏற்படவில்லை.

கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுவோரில் தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம்அதிகரித்து வருவது உண்மைதான். ஆனால், சோதனை செய்யப்படுவோர் எண்ணிக்கை குறைவாக இருப்பதுதான் இதற்குக் காரணம். உதாரணமாக டெல்லியில் கொரோனா சோதனையை அதிகரித்த பிறகு, தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம் 7-லிருந்து 5 சதவீதமாகக் குறைந்துள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 2 May 2022 4:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  4. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  5. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  6. வீடியோ
    🔴LIVE :கொல்கத்தாவில் நிர்மலா சீதாராமனின் அனல் பறக்கும் உரை ||...
  7. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    சவுக்கு சங்கரிடம் ஒரு நாள் விசாரணை நடத்த திருச்சி போலீசுக்கு கோர்ட்...
  9. அண்ணா நகர்
    250 வார்டுகளாக மேலும் விரிவடைகிறது பெருநகர சென்னை மாநகராட்சி எல்லை
  10. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!