கர்நாடகாவில் லாரி மீது கார் மோதி13 பேர் உயிரிழப்பு: பனிமூட்டத்தால் பரிதாபம்

கர்நாடகாவில் லாரி மீது கார் மோதி13 பேர் உயிரிழப்பு: பனிமூட்டத்தால் பரிதாபம்
X
கர்நாடகாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில்13 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், சிக்கபல்லப்பூர் பகுதியில், நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது, டாடா சுமோ மோதிய விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

சிக்கபல்லப்பூர் போக்குவரத்து காவல் நிலையத்துக்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. பனிமூட்டத்தால் இந்த விபத்து நிகழ்ந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந் நிலையில் விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது நடத்தப்பட்ட சோதனையில், டாடா சுமோ காரில் பயணித்தவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. இறந்தவர்களில் பலர் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 8 ஆண்கள், 4 பேர் பெண்கள் மற்றும் ஒரு குழந்தையும் அடங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படுவதாக பல வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்தனர். போலீஸார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story