ஹிமாச்சலில் நடுவழியில் சிக்கிக்கொண்ட கேபிள் கார்: பயணிகள் பத்திரமாக மீட்பு

ஹிமாச்சலில் நடுவழியில் சிக்கிக்கொண்ட கேபிள் கார்: பயணிகள் பத்திரமாக மீட்பு
X
ஹிமாச்சலில் நடுவழியில் சிக்கிக்கொண்ட கேபிள் காரில் இருந்த 11 பயணிகளும் 3 மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டனர்

இமாச்சலப் பிரதேசத்தின் பர்வானூவில் நடுவழியில் நின்ற கேபிள் காரில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சிக்கித் தவித்த 11 பேரும் மீட்கப்பட்டனர். "என்ன தவறு நடந்தது என்பது குறித்து நான் விரிவான அறிக்கை கேட்துள்ளேன்," என்று முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் கூறினார்,.

வட பகுதி முழுவதும் பிரபலமான டிம்பர் டிரெயில் தனியார் ரிசார்ட்டின் அம்சம் கேபிள் கார் ஆகும். சண்டிகரில் இருந்து கசௌலி மற்றும் சிம்லா செல்லும் பாதையில் சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டிம்பர் டிரெயில் தனியார் ரிசார்ட்டின் பிரபலமான அம்சமாக கேபிள் கார் உள்ளது. ஹரியானா, பஞ்சாப் மற்றும் சண்டிகருடன் இமாச்சலப் பிரதேசத்தின் உச்சியில் பர்வானூ இருப்பதால், இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் இதற்கு அடிக்கடி வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று காலை கேபிள் கார் நடுவழியில் சிக்கி நின்றது. சம்பவ இடத்துக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், பயணிகளை வெளியேற்றுவதற்காக கேபிளில் ஒரு மீட்பு டிராலி பயன்படுத்தி, கீழே கௌசல்யா நதி பள்ளத்தாக்கில் உள்ள ஒரு மலையின் மீது, அவை ஒவ்வொன்றாக கீழே இறக்கினர். அனைத்து பயணிகளும் மூன்று மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்கப்பட்டனர்

அக்டோபர் 1992 இல் டிம்பர் டிரெயிலில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றது. அப்போது, இராணுவம் மற்றும் விமானப்படையின் நடவடிக்கையில் 10 பயணிகள் மீட்கப்பட்டனர்; கேபிள் கார் ஆபரேட்டர் இறந்துவிட்டார்.

முதலில் பாதி பயணிகளை மட்டுமே மீட்க முடிந்தது. இரவு சூழ்ந்ததால், குழு தற்காலிகமாக மீட்பு பணியை நிறுத்தி, அடுத்த நாள் மற்றவர்களை வெளியேற்ற முடிந்தது. கேபிள் கார் கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால், பாதுகாப்பாக வெளியே குதிக்க முயன்ற ஆபரேட்டர், தலை பாறையில் மோதியதால் இறந்தார்.

Tags

Next Story
ai solutions for small business