/* */

பிரதமரின் சாலையோர வியாபாரிகளின் சுயசார்பு நிதி: 2024-ம்ஆண்டு டிசம்பர் வரை நீட்டிப்பு

பிரதமரின் சாலையோர வியாபாரிகளின் சுயசார்பு நிதியை (PM SVANidhi) 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு 2024-ம் ஆண்டு டிசம்பர் வரை தொடர அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது

HIGHLIGHTS

பிரதமரின் சாலையோர வியாபாரிகளின் சுயசார்பு நிதி: 2024-ம்ஆண்டு டிசம்பர் வரை நீட்டிப்பு
X

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, பிரதமரின் சாலையோர வியாபாரிகளின் சுயசார்பு நிதித் திட்டத்தின் கீழ் 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பின் 2024-ம் ஆண்டு டிசம்பர் வரை கடன் வழங்கும் நடவடிக்கைகளைத் தொடர ஒப்புதல் அளித்துள்ளது. பிணை இல்லாத குறைந்த வட்டியிலான கடன், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரித்தல் மற்றும் சாலையோர வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் முழுமையான சமூக-பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம், சாலையோர வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் பிணையில்லா கடன்கள் வழங்கப்படுகின்றன. 5,000 கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட இத்திட்டம் தற்போது 8,100 கோடி ரூபாய் கடன் தொகையாக அதிகரிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் சாலையோர வியாபாரிகளுக்கு அவர்களின் வணிகத்தை மேலும் விரிவுபடுத்தவும், அவர்களை தன்னிறைவு அடைபவராகவும் மாற்றுவதற்கான மூலதனத்தை வழங்குகிறது.விற்பனையாளர்களுக்கு கேஷ்பேக் உட்பட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கான பட்ஜெட் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் 1.2 கோடி மக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமரின் சாலையோர வியாபாரிகளின் சுயசார்பு நிதித் திட்டத்தின் கீழ், ஏற்கனவே குறிப்பிடத்தக்க சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் 25-ம் தேதி வரையிலான நிலவரப்படி, 31.9 லட்சம் கடன்கள் அனுமதிக்கப்பட்டு, அவற்றில் 29.6 லட்சம் பேருக்கு கடனாக 2,931 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 2-வது கடனைப் பொறுத்தவரை, 2.3 லட்சம் கடன்கள் அனுமதிக்கப்பட்டு, 1.9 லட்சம் பேருக்கு 385 கோடி ரூபாய் கடன் தொகையாக வழங்கப்பட்டுள்ளன. பயனாளிகளான சாலையோர வியாபாரிகள் 13.5 கோடிக்கும் அதிகமான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு 10 கோடி ரூபாய் கேஷ்பேக் வழங்கப்பட்டுள்ளது. வட்டி மானியமாக 51 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

Updated On: 27 April 2022 3:28 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு