/* */

அனைத்து தரப்பினருக்கும் உகந்த பட்ஜெட்: நிதித்துறை இணையமைச்ச்சர்

மத்திய நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்யும் பட்ஜெட், அனைத்து தரப்பினருக்கும் உகந்ததாக இருக்கும் என்று, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

அனைத்து தரப்பினருக்கும் உகந்த பட்ஜெட்: நிதித்துறை இணையமைச்ச்சர்
X

நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று 2022- 23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது, அவர் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் ஆகும்; காகிதம் இல்லாத இரண்டாவது பட்ஜெட் ஆகும். சட்டப்பேரவைத் தேர்தல் 5 மாநிலங்களில் நடைபெறுவதால், பட்ஜெட்டில் சுமையான அறிவிப்புகள் இருக்காது; சுகமான சலுகைகள் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில், நாடாளுமன்றத்திற்கு செல்லும் வழியில், அவை வளாகத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, செய்தியாளர்களிடம் கூறுகையில், "நிதியமைச்சர் தாக்கல் செய்யும் பட்ஜெட், நிச்சயம் அனைத்து துறைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதாக இருக்கும்; அதற்கேற்ப ஒருங்கிணைந்த பட்ஜெட்டை வழங்குவார். இந்த பட்ஜெட், அனைத்து தரப்பினரும் பயன் பெறும் வகையில் இருக்கும்" என்றார்.

Updated On: 1 Feb 2022 5:06 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு