இந்தியா முழுவதும் தபால் வாக்குகளில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலை

இந்தியா முழுவதும் தபால் வாக்குகளில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலை

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.

இந்தியா முழுவதும் தபால் வாக்குகளில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலை வகித்தது.

தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் இந்தியா முழுவதும் பாஜக முன்னிலை வகித்தது.

18 வது நாடாளுமன்றத்தை அமைப்பதற்கான ஜனநாயகத் திருவிழா எனும் பாராளுமன்ற தேர்தல் 2024இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் முதல் தேதி வரை இந்த தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது.

தமிழகத்தை பொறுத்தவரை முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே நாளில் வாக்கு பதிவு நடத்தி முடிக்கப்பட்டது .அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் இந்தியா முழுவதும் 64 கோடி பேர் வாக்களித்ததாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜ்குமார் நேற்று அளித்த பேட்டியில் பெருமையாக கூறினார். இது உலக அளவில் மிகப்பெரிய சாதனை என்னும் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் இந்தியா முழுவதும் பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.

543 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தபால் வாக்குகளில் தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர். ஆனால் அகில இந்திய அளவில் பெரும்பாலான தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் அதாவது தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலை பெற்றிருந்தனர்.

காலை 9 மணி நிலவரப்படி பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர்கள் சுமார் 300 இடங்களிலும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 180 இடங்களிலும் முன்னிலை பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story