/* */

பிரசார பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு தடை

பிரசார பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு தடை
X

கேரளாவில், அரசியல் கட்சிகள் இன்று இடம்பெறவிருந்த பொதுக்கூட்டங்களுக்கு தடை விதித்து, தேர்தல் ஆணையகம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.கேரளாவில், 140 தொகுதிகளை உள்ளடக்கிய சட்டசபைக்கு,நாளை மறுதினம் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது.

இந்த நிலையில், இன்றுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடையவுள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரங்களில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இதேநேரம், மாநிலத்தில், கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பிரசாரத்தின் இறுதி நாளை முன்னிட்டு பிரதான அரசியல் கட்சிகள் பெரிய அளவிலான பொதுக்கூட்டங்கள், பேரணிகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளன.பொதுக்கூட்டத்திற்காக மக்கள் ஒன்றுகூடினால், வைரஸ் பரவல் மேலும் அதிகரிக்கும் என்பதால், இதற்கு தடை விதிக்கக்கோரி, தேர்தல் ஆணையத்திற்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி, நேற்று கடிதம் அனுப்பினார்.அவரது கோரிக்கையை ஏற்ற ஆணையம், கேரளாவில் இன்று இடம்பெறவிருந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு தடை விதித்து, உத்தரவிட்டது.

Updated On: 4 April 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?