அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்

அரவிந்த் கெஜ்ரிவால் 

அமலாக்கத்துறை 5 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகததால் வரும் 17-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யு நீதிமன்றம் உத்தரவிட்டது

டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் சிலரை அமலாக்கத்துறை கைது செய்து உள்ளது. அவர்கள் ஜாமின் கிடைக்காமல் சிறைலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் மேல் சம்மனாகக் கொடுத்து வருகிறது. ஆனால் அவர் ஆஜராக மறுத்து வருகிறார்.

இதற்கிடையே, 5 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை என அமலாக்கத் துறை சார்பில் டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த ரோஸ் அவென்யு நீதிமன்றம், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 17-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிப்ரவரி 17ஆம் தேதி நேரில் ஆஜராகி, தேசிய தலைநகரில் நடந்த மதுபான கலால் கொள்கை ஊழல் வழக்கில் தொடர்புடைய பணமோசடி வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத்துறையின் ஐந்து சம்மன்களை அவர் ஏன் புறக்கணித்தார் என்பதை விளக்குமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, "நீதிமன்ற உத்தரவை ஆய்வு செய்கிறோம்... சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்" என்று கூறியுள்ளது. கட்சி வட்டாரங்கள் கூறுகையில், சம்மன் எப்படி சட்டவிரோதமானது என்பதை நாங்கள் நீதிமன்றத்தில் கூறுவோம் என்று தெரிவித்துள்ளது.

கெஜ்ரிவாலின் விதிமுறைகளை மீறியதாக மத்திய புலனாய்வு அமைப்பு கடந்த வாரம் புதிய புகாரை பதிவு செய்தது. ஒரு பொது ஊழியரான அவர், அரசு நிறுவனத்தின் உத்தரவை புறக்கணிக்க முடியாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பிப்ரவரி 2 ஆம் தேதி அமலாக்க இயக்குனரகத்தின் ஐந்தாவது அழைப்பை ஆம் ஆத்மி கட்சித் தலைவர் நிராகரித்தார்.

Tags

Next Story