நடிகை ஜெயப்ரதாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

நடிகை ஜெயப்பிரதா
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ஜெயபிரதாவை, உத்தரபிரதேச மாநிலம், ராம்பூரில் உள்ள நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை "தலைமறைவாக" அறிவித்தது. தேர்தல் விதிமுறைகளை மீறிய இரண்டு வழக்குகள் தொடர்பாக பிராடா தப்பியோடியுள்ளார். மேலும், அவரை கைது செய்து மார்ச் 6-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தொடரப்பட்ட இரு வழக்குகளில் நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்ரதாவை மார்ச் 6-ஆம் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தர பிரதேச காவல்துறைக்கு அந்த மாநில சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் அழைப்பாணைகளை ஜெயப்ரதா தொடர்ந்து புறக்கணித்து வந்த நிலையில், அவருக்கு எதிராக கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் கடந்த 2004 முதல் 2014 வரை சமாஜ்வாதி எம்.பி.யாக பதவி வகித்த ஜெயப்ரதா, பின்னர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் இதே தொகுதியில் பாஜக சார்பில் அவர் களமிறங்கினார். எனினும், சமாஜ்வாதி வேட்பாளர் ஆஸம் கானிடம் தோல்வியடைந்தார்.
இத்தேர்தலின்போது நடத்தை விதிகளை மீறியதாக, ஜெயப்ரதா மீது இரு வழக்குகள் பதிவாகின. ராம்பூரில் உள்ள எம்.பி.-எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, விசாரணைக்கு ஆஜராகும்படி ஜெயப்ரதாவுக்கு நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியது. எனினும், அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, ஜாமீனில் வெளிவர இயலாத பிடியாணைகளும் பிறப்பிக்கப்பட்டன.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், ஜெயபிரதா கைது செய்வதைத் தவிர்க்கிறார் என்றும், அவருக்குத் தெரிந்த அனைத்து மொபைல் எண்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகவும், அரசுத் தரப்பு அதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில், ஜெயப்ரதாவை தலைமறைவானவர் என்று சிறப்பு நீதிபதி ஷோபித் பன்சால் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். அவரை மார்ச் 6-ஆம் தேதிக்குள் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu