200 புதிய விமானங்களை வாங்க ஏர் இந்தியா திட்டம்

200 புதிய விமானங்களை  வாங்க ஏர் இந்தியா திட்டம்
X
ஏர் இந்தியா 200-க்கும் மேற்பட்ட புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது, அவற்றில் 70 சதவீதம் சிறிய விமானங்களாக இருக்கும்.

டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா 200-க்கும் மேற்பட்ட புதிய விமானங்களை வாங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், அவற்றில் 70 சதவீதம் சிறிய விமானங்கள் என்றும் விமானத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏர்பஸ்ஸின் A350 பெரிய விமானத்தை வாங்குவதற்கு குறித்து ஏர் இந்தியா முடிவெடுக்கவில்லை. இருந்தாலும், சிறியரக விமானங்களை வாங்குவதற்கு ஏர்பஸ் மற்றும் போயிங்குடன் பேச்சுவார்த்தை இன்னும் நடந்து வருகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஏர்பஸ் ஏ350 போன்ற அகலமான விமானம், இந்தியா-அமெரிக்க வழிகள் போன்ற நீண்ட தூரம் பயணிக்க அனுமதிக்கும் ஒரு பெரிய எரிபொருள் தொட்டியைக் கொண்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனத்திடம் இருந்து 68 விமானங்களையும், ஐரோப்பிய விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 43 விமானங்களையும் சேர்த்து 111 விமானங்களை வாங்குவதற்கான ஆர்டர்களை 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏர் இந்தியா நிறுவனம் வாங்கவில்லை

கடந்த ஆண்டு அக்டோபர் 8ம் தேதி ஏர் இந்தியா ஏலத்தில் வெற்றி பெற்றதை அடுத்து , ஜனவரி 27ம் தேதி டாடா குழுமம் ஏர் இந்தியாவைக் கைப்பற்றியது .

சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் 78வது ஆண்டு பொதுக் கூட்டத்தையொட்டி, ஏர் இந்தியா 200 புதிய விமானங்களை வாங்க பரிசீலித்து வருவதாக விமானத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஏர்பஸ் ஏ320 விமானம் அல்லது போயிங்கின் 737 மேக்ஸ் இதில் எந்த சிறியரக விமானத்தை வாங்குவது என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஏர் இந்தியாவின் இணையதளத்தின்படி, விமான நிறுவனம் 18 போயிங் பி777, 4 போயிங் பி747 மற்றும் 27 போயிங் பி787 என மொத்தம் 49 பரந்த-உடல் விமானங்களையும், 79 சிறிய ரக விமானங்களையும் கொண்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture