மணிப்பூரில் அரசு இயந்திரங்கள் முழுமையாக செயலிழந்து விட்டன: உச்ச நீதிமன்றம்

மணிப்பூரில் அரசு இயந்திரங்கள் முழுமையாக செயலிழந்து விட்டன: உச்ச நீதிமன்றம்

மணிப்பூர் பாலியல் வன்முறை - கோப்புப்படம்

விசாரணை அலட்சியமாக நடக்கிறது எப்.ஐ.ஆர் பதிவு செய்வதிலும், அறிக்கைகள் பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.

மணிப்பூர் பெண்கள் பலாத்காரம், ஆடைகள் இன்றி இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது மணிப்பூர் அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியது.

மேலும் மணிப்பூர் விவகாரத்தில் காவல்துறை மீது அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான முதல் தகவல் அறிக்கை எப்போது பதிவு செய்யப்பட்டது? மணிப்பூர் மாநிலத்தில் 2 மாதங்களாக வன்முறை தொடர்ந்த போதும் மாநில அரசு அலட்சியமாக செயல்பட்டிருக்கிறது என்று கூறியது.

இன்று பிற்பகல் விசாரணை தொடங்கியபோது, ​​வன்முறை தொடர்பான 6,523 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 11 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பானவை என்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் தெரிவித்தார். நீதிமன்றத்தில் சமர்பிக்கும் நிலை அறிக்கையின் ஒரு பகுதியே இந்தத் தரவு என்று அவர் கூறினார்.

பெண்களை நிர்வாணமாக அணிவகுத்து, கும்பல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் கொடூரமான வீடியோ தொடர்பான வழக்கில் ஒரு சிறார் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மேத்தா பெஞ்ச் முன் கூறினார். இரண்டு பெண்கள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மற்றொரு சம்பவத்தின் விவரங்களை தலைமை நீதிபதி கேட்டார்.

ஒரே இரவில் 6,000 எஃப்ஐஆர்களைக் கடந்துவிட்டதாகவும், தரவுகளில் சில பிழைகள் இருக்கலாம் என்றும் தனது பதிலை மறுதலிப்புடன் முன்வைத்த திரு மேத்தா, மே 15 அன்று ஜீரோ எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, ஜூன் 16 அன்று வழக்கமான எஃப்ஐஆராக மாற்றப்பட்டது என்று பெஞ்சில் தெரிவித்தார். யாரேனும் கைது செய்யப்படவில்லையா என்று தலைமை நீதிபதி கேட்டதற்கு, சொலிசிட்டர் ஜெனரல் தன்னிடம் அதுகுறித்து தகவல் இல்லை என்றார்.

மேத்தா சமர்ப்பித்த அறிக்கையைப் படிக்கும் போது, ​​மே 4 அன்று நடந்த ஒரு சம்பவத்திற்கு ஜூலை 26 தேதியிட்ட எஃப்ஐஆர் என்று தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார். ஓரிரு வழக்குகளைத் தவிர, மற்ற வழக்குகளில் யாரும் கைது செய்யப்படுவதில்லையா? விசாரணை மிகவும் மந்தமாக உள்ளது. எப்.ஐ.ஆர்., பதிவு செய்வதில் காலதாமதம், கைது இல்லை. கடந்த இரண்டு மாதங்களாக, பதிவு செய்யக்கூட முடியாத சூழல் நிலவுகிறது. " என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கேட்டார்.

மாநிலத்தில் வன்முறை தொடர்பாக மணிப்பூர் அரசுக்கு எதிரான கடுமையான கருத்துகளில், கடந்த இரண்டு மாதங்களாக மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

விசாரணையை "அலட்சியமானது" என்று கூறிய பெஞ்ச் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதிலும், அறிக்கைகள் பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும், மணிப்பூர் மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு முழுவதும் செயலிழந்துவிட்டது. மாநில காவல்துறை விசாரணை செய்ய முடியாது . அவர்கள் கட்டுப்பாட்டை இழந்துவிட்டனர். சட்டம் ஒழுங்கு முற்றிலும் இல்லை... கடந்த இரண்டு மாதங்களாக மணிப்பூரில் அரசியலமைப்பு இயந்திரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது" என்று கோபமடைந்த தலைமை நீதிபதி கூறினார்.

மணிப்பூர் மாநில அரசு மக்களை காப்பாற்றாவிட்டால் அந்த மக்கள் எங்கேதான் போவார்கள்? மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கை காப்பாற்ற மாநில போலீசாரால் முடியவில்லை. சட்டம் மற்றும் ஒழுங்கு என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் முழுமையாக இல்லாமல் போய்விட்டது. வரும் வெள்ளிக்கிழமை மணிப்பூர் மாநில சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது

மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங்கை பதவி நீக்கம் செய்து, மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கோரி வரும் எதிர்க்கட்சிகளுக்கு நீதிமன்றத்தின் கருத்துகள் மேலும் ஊக்கம் அளிக்கும் எனத் தெரிகிறது.

Tags

Next Story