Begin typing your search above and press return to search.
ஜம்மு காஷ்மீர்: ராணுவ வாகனம் தீப்பிடித்ததில் 4 வீரர்கள் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் செக்டாரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
HIGHLIGHTS
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் வியாழக்கிழமை வாகனம் தீப்பிடித்ததில் நான்கு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பாடா துரியன் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மின்னல் தாக்கம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பவம் நடந்த இடத்திற்கு ராணுவம் மற்றும் காவல்துறைவியினர் விரைந்துள்ளனர். இதற்கிடையில், இந்த சோகமான சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.