தீர்ப்பை நிறைவேற்றாத ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 2 வாரம் சிறை-ஐகோர்ட் அதிரடி

தீர்ப்பை நிறைவேற்றாத ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேரும் ஓராண்டுக்கு மாதத்தில் ஒரு நாள் சமூக நலத்துறை விடுதிக்கு சென்று சேவை செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆந்திர மாநிலத்தில் அரசு பள்ளிகளில் உள்ள கிராம மற்றும் வார்டு செயலகங்களை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை நிறைவேற்ற தவறியதால் சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் முடிவில், 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலா இரண்டு வாரங்கள் சிறைத்தண்டனை விதித்து ஐகோர்ட் இன்று தீர்ப்பளித்தது.
தீர்ப்பை நிறைவேற்றத் தவறியமைக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேரும் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினர். இதையடுத்து அவர்களுக்கான சிறைத்தண்டனையை திரும்ப பெற்ற நீதிமன்றம், அவர்கள் 8 பேரும் ஓராண்டுக்கு மாதத்தில் ஒரு நாள் சமூக நலத்துறை விடுதிக்கு சென்று சேவை செய்யும்படி உத்தரவிட்டது. மாணவர்களின் மதிய உணவு மற்றும் இரவு உணவு மற்றும் நீதிமன்றத்தின் ஒரு நாள் செலவினங்களுக்கான செலவுகளையும் 8 பேரும் ஏற்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu