ஹரியானா கார் விபத்தில் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உயிரிழப்பு

ஹரியானா கார் விபத்தில் 2  போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உயிரிழப்பு
X

விபத்துக்குள்ளான கார்.

ஹரியானா கார் விபத்தில் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் குண்ட்லி எல்லை அருகே அவர்களுக்கு முன்னால் வந்த லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால் இந்த விபத்து ஏற்பட்டது.

ஹரியானா மாநிலம், சோனேபட் மாவட்டத்தின் குண்ட்லி எல்லை அருகே நேற்று இரவு லாரி மீது கார் மோதியதில் டெல்லி காவல்துறையின் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் வடமேற்கு மாவட்ட சிறப்பு பணியில் இருந்த தினேஷ் பெனிவால் மற்றும் டெல்லியில் உள்ள ஆதர்ஷ் நகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய ரன்வீர் சிங் சாஹல் ஆகியோர் என போலீசார் அடையாளம் கண்டனர். பெனிவால் ஜஜ்ஜரில் உள்ள தாதன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர், சாஹல் ஜிந்தில் உள்ள நர்வானாவைச் சேர்ந்தவர்.

நேற்று இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகவும், அப்போது லாரி ஓட்டுநர் ஒருவர் திடீரென பிரேக் போட்டதாகவும், கார் அதன் மீது மோதியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

அடர்த்தியான மூடுபனிக்கு மத்தியில் விபத்து நடந்தபோது பெனிவால் காரை ஓட்டிச் சென்றார். அவர்கள் டெல்லியில் இருந்து சோனேபட் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சோனேபட் சிவில் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?