/* */

மத்திய நிதியுதவி திட்டத்தின் கீழ் 157 மருத்துவக் கல்லூரிகள்: மத்திய அமைச்சர் பதில்

மத்திய நிதியுதவி திட்டத்தின் கீழ் 157 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.

HIGHLIGHTS

மத்திய நிதியுதவி திட்டத்தின் கீழ் 157 மருத்துவக் கல்லூரிகள்: மத்திய அமைச்சர் பதில்
X

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் மாவட்ட மருத்துவமனைகளை வலுப்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது. மாவட்ட மருத்துவமனையின் செயல்திறன் மற்றும் சேவையின் தரத்தை மேம்படுத்த சீரிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

செவிலியர்கள், ஏ.என்.எம்.கள், துணை மருத்துவப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான பயிற்சித் தளங்களாக மாவட்ட மருத்துவமனைகளின் திறன்களை மேம்படுத்துவதற்கும், மருத்துவ அதிகாரிகளுக்கு டிப்ளமேட் நேஷனல் போர்டு / சி.பி.எஸ் படிப்புகளை வழங்குவதற்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

மாவட்ட மருத்துவமனைகளில் நோயாளிகளின் கருத்துகளை சொல்ல வழிவகுக்கும் "மேரா அஸ்படால்" என்ற செயலியை அரசு ஒருங்கிணைத்துள்ளது. பொது சுகாதார வசதிகள் மூலம் வழங்கப்படும் சேவைகள் பாதுகாப்பானதாகவும், நோயாளிகளை மையமாகக் கொண்டதாகவும், தரத்தை உறுதி செய்வதற்காக, தேசிய தர உத்தரவாத சான்றிதழ் அனைத்துப் பொது சுகாதார நிலையங்களிலும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பொது சுகாதார நிலையங்களுக்கு வருகை தரும் நோயாளிகளின் கையிருப்புக்கான செலவைக் குறைப்பதற்காக, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் நோய் கண்டறியும் பரிசோதனைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, தேசிய சுகாதாரக் குழுமத்தின் கீழ், இலவச மருந்துகள் சேவை முயற்சி மற்றும் இலவச நோயறிதல் முன்முயற்சி ஆகியவற்றை அரசு தொடங்கியுள்ளது.

இ-சஞ்சீவனி போன்ற ஆன்லைன் வழி மருத்துவ ஆலோசனை தளங்கள் மூலம் சிறப்பு கவனிப்புக்கான அணுகல் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவத் தகவல் மேலாண்மைத் திட்டம் மாவட்ட மருத்துவமனைகளின் செயல்பாடுகளை அறிய உதவுகிறது. அதன்படி, மருத்துவத் தகவல் மேலாண்மைத் திட்டத்தில் பெறப்பட்ட தரவுக் குறியீடுகளின் அடிப்படையில், அமைப்பு, செயல்முறை, வெளியீடு, வெளிப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய 17 முக்கிய செயல்திறன் குறியீடுகளின் தொகுப்பை நித்தி ஆயோக் மற்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கூட்டாக இறுதி செய்துள்ளன. இரண்டாவது சுற்று மதிப்பீட்டில், மொத்த மாவட்ட மருத்துவமனைகளில் சுமார் 10% எச்.எம்.ஐ.எஸ்-அறிக்கையிடப்பட்ட தரவுகளின் தரவு சரிபார்ப்பு செய்யப்படும்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மருத்துவக் கல்வியில் அடைந்த முன்னேற்றம்

மத்திய நிதியுதவி திட்டத்தின் கீழ் 157 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அரசு அதிகரித்துள்ளதுடன், எம்பிபிஎஸ் / முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களையும் அதிகரித்துள்ளது. 2014-க்கு முன்பு 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 706-ஆக 82% அதிகரித்துள்ளது. மேலும், 2014-ம் ஆண்டுக்கு முன்பு 51,348 ஆக இருந்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை தற்போது 112 சதவீதம் அதிகரித்து 1,08,940 ஆகவும், 2014-ம் ஆண்டுக்கு முன்பு 31,185 ஆக இருந்த முதுநிலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை தற்போது 70,645 ஆகவும் 127 சதவீதம் அதிகரித்துள்ளது.

வடகிழக்கு மற்றும் சிறப்புப் பிரிவு மாநிலங்களுக்கு 90:10 என்ற விகிதத்திலும், பிற மாநிலங்களுக்கு 60:40 என்ற விகிதத்திலும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிதி பகிர்வுடன் ஏற்கனவே உள்ள பின்தங்கிய பகுதிகள் மற்றும் முன்னேற விரும்பும் மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, தற்போதுள்ள மாவட்ட / பரிந்துரை மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கான மத்திய நிதியுதவி திட்டத்தை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் நிர்வகிக்கிறது. இத்திட்டத்தின் கீழ், திட்டமிடப்பட்ட 157 மருத்துவக் கல்லூரிகளும் மூன்று கட்டங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன, இவற்றில் 108 மருத்துவக் கல்லூரிகள் செயல்படத் தொடங்கியுள்ளன. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் நிதி வழங்கப்பட்டுள்ளது.

'தற்போதுள்ள மாவட்ட / பரிந்துரை மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுதல்' என்பது மத்திய நிதியுதவி திட்டத்தின் கீழ் 157 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் தமிழ்நாட்டில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

இது தவிர, புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைப்பதற்கான மத்திய அரசின் திட்டத்தின் கீழ், 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 19 இடங்களில் இளங்கலை படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் இதனைத் தெரிவித்துள்ளார்.

Updated On: 2 Feb 2024 4:47 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  2. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  5. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  6. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  7. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  9. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  10. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!