தமிழர் மேன்மைகளை வெளிப்படுத்தும் பொங்கல்- மோடி

தமிழர் மேன்மைகளை வெளிப்படுத்தும் பொங்கல்- மோடி
X

பொங்கல் திருநாளையொட்டி,தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இன்று தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதில் பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், தமிழ்ச் சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள். தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை இது. நல்ல உடல் நலமும் வெற்றிகளும் பெறுவோமாக. இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் இந்தப் பண்டிகை நம்மைத் தூண்டட்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Tags

Next Story
ai in future agriculture