/* */

மகாராஷ்டிரா தீ விபத்து : மோடி, ராஜ்நாத்சிங் இரங்கல்

மகாராஷ்டிரா தீ விபத்து : மோடி, ராஜ்நாத்சிங் இரங்கல்
X

மகாராஷ்டிரா அரசு பொது மருத்துவமனையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் இறந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி, அமைச்சர் ராஜ்நாத்சிங் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் உள்ள, பண்டாரா அரசு பொது மருத்துவமனையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிறப்பு பச்சிளம் குழந்தைகள் வார்டில் இருந்த புதிதாகப் பிறந்த பத்து பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். ஏழு குழந்தைகள் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கலில், மகாராஷ்டிராவின் பண்டாராவில் நிகழ்ந்த தீ விபத்தில் பத்து பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு வேதனையாக உள்ளது. நாங்கள் விலைமதிப்பற்ற இளம் உயிர்களை இழந்துவிட்டோம் என்று மோடி கூறியுள்ளார்.தீ விபத்தில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன், குழந்தைகளை இழந்து வாடும் அவர்களது குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

Updated On: 9 Jan 2021 5:52 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...