Begin typing your search above and press return to search.
அமெரிக்க சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம்
சட்டவிரோதமான போராட்டங்கள் மூலம் ஜனநாயக நடைமுறைகள் சிதைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற நாடாளுமன்ற முற்றுகை மற்றும் துப்பாக்கிசூடு சம்பவம் உலகையே அதிர வைத்துள்ளது. இதற்கு உலக தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து இந்திய பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, வாஷிங்டனில் நடைபெறும் வன்முறை தொடர்பான செய்திகள் வேதனை அளிக்கிறது. அமைதியான வழியில் அதிகார மாற்றம் நடைபெற வேண்டும். சட்டவிரோதமான போராட்டங்கள் மூலம் ஜனநாயக நடைமுறைகள் சிதைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.