/* */

திட்டமிட்டபடி குரூப் 2 தேர்வு நடக்குமா? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வுகள், திட்டமிட்டபடி நடைபெறுமா என்பதற்கு, அதன் தலைவர் பாலசந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

திட்டமிட்டபடி குரூப் 2 தேர்வு நடக்குமா? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
X

இது தொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வருகிற 21ம் தேதி, திட்டமிட்டபடி குரூப் 2 தேர்வுகள் நடக்கும். அன்றைய தினம், காலை 9.30 மணிக்கு தேர்வுகள் தொடங்கும். ஒரு மணி நேரம் முன்னதாகவே தேர்வர்கள் மையத்திற்கு கட்டாயம் வர வேண்டும் என்றார்.

நடப்பாண்டில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கு கடந்த ஆண்டை விட 2 லட்சம் பேர் கூடுதலாக விண்ணப்பம் செய்துள்ளனர். அதன்படி மொத்தம் 11,78,175 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளதாக குறிப்பிட்ட பாலசந்திரன், மாவட்ட தலைநகரங்கள் மற்றும் குறிப்பிட்ட தாலுக்காக்களை உள்ளடக்கிய 117 தேர்வு மையங்களில் 4,012 தேர்வுக்கூடங்களில் தேர்வு நடைபெறும் என்றார்.

குரூப் 2 தேர்வு முடிவுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஜூன் மாதம் இறுதியில் குரூப் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார்.

Updated On: 17 May 2022 1:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்