/* */

பிப்ரவரியில் குரூப் 2, மார்ச்சில் குரூப்-4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

வரும் பிப்ரவரியில் குரூப் 2, மார்ச் குரூப்-4 தேர்வுகள் நடைபெறும் என்று, டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

பிப்ரவரியில் குரூப் 2, மார்ச்சில் குரூப்-4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
X

வரும் 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் குரூப் 2, மார்ச் குரூப்-4 தேர்வு நடைபெறும் என்று, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து, டி .என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன், செயலாளர் உமா மகேஸ்வரி, தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா ஆகியோர், சென்னையில் இன்று, செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பணி நியமனங்கள், போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த திட்ட அறிக்கையை வெளியிட்டனர்.

அதன்படி, 2022ம் ஆண்டு 32 வகையாக தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குரூப் 2, குரூப் 2a தேர்வுக்கான அறிப்பாணை பிப்ரவரி மாதம் வெளியாகும். குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பாணை மார்ச் மாதத்தில் வெளியாகும். அட்டவணை வெளியிடப்பட்ட 75 நாள்களுக்கு பிறகு தேர்வுகள் நடைபெறும். விடைத்தாள் ஏற்றக்கூடிய லாரிகளை, ஜிபிஎஸ் கொண்டு கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

வரும் 2022-ம் ஆண்டு பிப்ரவரியில், குரூப் 2, மார்ச் மாதத்தில் குரூப்-4 தேர்வு நடைபெறும். இன்றைய தேதியின்படி, குரூப் 2 -ஏ மொத்தம் 5,831 காலிப்பணியிடங்களும், குரூப்-4 பிரிவில் 5,244 காலிப்பணியங்களும் உள்ளன. இந்த அறிவிப்புக்கு பின்னர் காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குரூப்-4 தேர்வில் தமிழ்தாளில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என்று, அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Updated On: 8 Dec 2021 5:36 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!