/* */

சி.எஸ்.ஐ.எப்., பணியில் சேர அழைப்பு

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் சேர, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

HIGHLIGHTS

சி.எஸ்.ஐ.எப்., பணியில் சேர அழைப்பு
X

சி.எஸ்.ஐ.எப்., பணி செய்ய வாய்ப்பு; தகுதியானவர்கள் விண்ணபிக்கலாம்,

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (சி.எஸ்.ஐ.எப்) உதவி சப்-இன்ஸ்பெக்டர், தலைமை காவலர் என 540 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கம்ப்யூட்டரில் விரைவாக டைப்பிங் செய்வதற்கு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 25-10-2022 அன்றைய தேதிப்படி 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 26-10-1997-க்கு முன்போ, 25-10-2004 -க்கு பின்போ பிறந்திருக்கக்கூடாது.

அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை, ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 26-9-2022 முதல் 25-10-2022 வரை விண்ணப்பங்களை இணையதளம் வழியாக சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://www.cisfrectt.in/ என்ற இணைய பக்கத்தை பார்வையிடலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 19 Sep 2022 4:25 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’