என்எல்சி இந்தியா நிறுவனத்தில் உதவித்தொகையுடன் கூடிய தொழில் பழகுனர் பயிற்சி

தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலத்தில் 2019/2020/ 2021-ம் ஆண்டுகளில் படிப்பை முடித்து, தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
என்எல்சி இந்தியா நிறுவனத்தில் உதவித்தொகையுடன் கூடிய தொழில் பழகுனர் பயிற்சி
X

இந்திய அரசு பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் தமிழகத்தின் நெய்வேலியில் செயல்பட்டுவருகிறது. இந்த நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ITI/பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, "தொழில் பழகுநனர் சட்டம் 1961" விதிகளுக்கு உட்பட்டு உதவித்தொகையுடன் கூடிய தொழில் பழகுனர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

காலியிடம் ஏற்பட்டுள்ள தொழிற்பிரிவுகள், காலியிட விபரம், பயிற்சி காலம், உதவித் தொகை விபரங்கள் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்த விபரம் வருமாறு:

1.பயிற்சியின் பெயர்: Apprenticeship Training

மொத்த காலியிடங்கள்: 675

கல்வித்தகுதி:

வரிசை எண் 1 முதல் 11 வரையுள்ள தொழிற்பிரிவுகளுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி பெற சம்மந்தப்பட்ட டிரேடில் ITI படிப்பை முடித்து NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

PASAA தொழிற்பிரிவிற்கு COPA டிரேடில் ITI படித்திருக்க வேண்டும். Ac countant பிரிவிற்கு B.Com., Data Entry Operator பிரிவிற்கு B.Sc. (Computer Science)/ BCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Assistant (HR) பிரிவிற்கு BBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட அனைத்து படிப்புகளுக்கும் 2019/2020/ 2021-ம் ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.10.2021 தேதியின்படி 14 வயது பூர்த்தி யடைந்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் மதிப் பெண் அடிப்படையில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், தற்போது பயிற்சி பெற்றுக் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்க கூடாது.

தமிழ்நாடு மற்றும் பாண்டிசேரியை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்பட தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரம் 7.9.2021 அன்று, நேர்முகத் தேர்வு 13.9.2021 அன்று நடைபெறும். பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பற்றிய விபரம் 27.9.2021 அன்று இணையதளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

www.nlcindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப் பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 25.8.2021.

ஆன்லைனில் விண்ணப்பித்தபின் அதை பிரிண்ட் எடுத்து அதனுடன் சுய அட்டெஸ்ட் செய்யப்பட்ட கல்வித்தகுதி சான்று, மதிப் பெண்பட்டியல், சாதி சான்றிதழ் போன்ற தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 30.8.2021 தேதிக்கு முன்னர் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

பொது மேலாளர்,

கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்,

வட்டம்-20,

நெய்வேலி -607803.

அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் : https://www.nlcindia.in

இதில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

Updated On: 23 Aug 2021 3:03 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    Urinary Bladder Meaning In Tamil சிறுநீரக தொந்தரவு வராம இருக்கணுமா? ...
  2. தமிழ்நாடு
    4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  3. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே, காட்டு யானைகளால் தென்னை மரங்கள் சேதம்
  4. வணிகம்
    Bitcoin Crosses $40000 Mark-எகிறிய கிரிப்டோ சந்தை..! காரணம் என்ன..?
  5. லைஃப்ஸ்டைல்
    Milk Meaning In Tamil பிறப்பு முதல் இறப்பு வரை பயன்படும் பொருள்...
  6. கந்தர்வக்கோட்டை
    கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாற்றுத் திறனாளி தினத்தை முன்னிட்டு...
  7. திருவள்ளூர்
    புழல் ஏரியில் 3000 கனஅடி தண்ணீர் திறப்பு..! வெள்ள அபாய எச்சரிக்கை..!
  8. தொழில்நுட்பம்
    2024 Instagram Trend Talk-இன்ஸ்டாகிராமை கட்டமைக்கும் இந்திய 'ஜென்...
  9. கல்வி
    Canada Student Visa Latest News-கனடாவில் படிக்க இந்திய மாணவர்கள்...
  10. சினிமா
    அர்ச்சனா அப்செட்...! காண்டேத்திய பூர்ணிமா..!