விராலிமலை தொகுதியில் மீண்டும் வாக்கு எண்ணிகை நிறுத்தம்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் போட்டியிட்டார். திமுக சார்பில் பழனியப்பன் போட்டியிட்டார். இந்தத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8.30 மணிக்குத் தொடங்கியது.
முதல் சுற்றில் ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எழுதப்பட்டிருந்த எண்ணும் ஆவணங்களில் இருந்த எண்ணும் வேறுபட்டது. இதனால் சர்ச்சை எழுந்தது. அந்தப் பெட்டி திறந்து எண்ணப்பட்டதுடன் விவிபாட் இயந்திரமும் எண்ணப்பட்டு சரி பார்க்கப்பட்டது.
அதன்பிறகு 2ஆம் சுற்றுக்கான இயந்திரங்கள் எடுத்து வரப்பட்டன. அதிலும் இயந்திரத்தில் இருந்த எண் மாறுபட்டது. தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எழுதப்பட்ட எண்கள் மாறுபட்டே வருவதைக் கண்ட திமுக வேட்பாளர் மற்றும் முகவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரினர்.
வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த திமுக மாவட்டப் பொறுப்பாளர் கே.கே. செல்லப்பாண்டியன், இதுதொடர்பாக மாவட்டத் தேர்தல் அலுவலர் பி. உமாமகேஸ்வரிக்கு எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தார். சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.
இந்த நிலையில் ஏழாவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும்பொழுது அதிமுக திமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu