தொலைதூரக்கல்வி மாணவரா நீங்கள்? யுஜிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் - கோப்பு படம்
By - S.Elangovan,Sub-Editor |29 March 2022 7:15 AM GMT
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்பில் சேரவேண்டாம் என்று, யுஜிசி எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக, பல்கலைக்கழக மானியக்குழுவான யுஜிசி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரப் படிப்புகளுக்கு 2014- 15ம் ஆண்டு வரை மட்டுமே அங்கீகாரம் தரப்பட்டிருந்தது.
தற்போது, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூர படிப்புகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படாத நிலையில், அங்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அங்கீகாரம் இல்லாததால், தொலைதூரப் படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என்று யுஜிசி எச்சரித்துள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu