/* */

சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்அனைத்து பாடப்பிரிவுகளில் சேர இன்று கடைசி நாள்

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஜூலை 31 என பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்அனைத்து  பாடப்பிரிவுகளில் சேர இன்று கடைசி நாள்
X

சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் - பாடப்பிரிவுகளில் மாணவர்கள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஜூலை 31

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஜூலை 31 என பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மனோன்மணி யம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் அர. மருதக்குட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பில்

இப்பல்கலைக்கழக துறைகளில் பயிற்றுவிக்கப்படும் அனை த்து பாடப்பிரிவுகளிலும் 2021-2022-ம் கல்வியாண்டில் சேர விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க இன்று கடைசிதேதி ஜூலை 31 ஆகும். முதுகலை பாடப்பிரிவுகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு வரும் ஆகஸ்ட் 12, 13-ம் தேதிகளில் இணையதளம் வாயிலாக நடைபெறும்.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இணையதளம் வாயிலாக அறிவிக்கப்படும். ஏனைய படிப்புகளுக்கான சேர்க்கை மாணவர்கள் சமர்ப்பித்துள்ள மதிப்பெண் பட்டியல் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு தேர்வுப்பட்டியல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

மற்ற விவரங்களை பல்கலைக்கழக தொலைபேசி எண் 0462-2333741 மூல மாகவோ அல்லது www.msuniv.ac.in என்ற இணைய தளம் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Updated On: 31 July 2021 4:35 AM GMT

Related News