/* */

பிப். 1 முதல் எந்த வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு? அமைச்சர் தகவல்

தமிழகத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல், பள்ளிகள் திறக்க, அரசுக்கு பள்ளிக்கல்வித்துறை பரிந்துரைத்துள்ளது.

HIGHLIGHTS

பிப். 1 முதல் எந்த வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு? அமைச்சர் தகவல்
X

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. எனினும், பொதுத்தேர்வு எழுதும் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. எனினும், ஒமிக்ரான் பரவலால், பொங்கல் விடுமுறைக்கு பின்னர், ௧௦ - 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை நீட்டிக்கப்பட்டது.

அதன்படி, வருகிற 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, பல மாவட்டங்களில் தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், வரும் 31ஆம் தேதிக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், பிப்ரவரியில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அதன்படி, பிப்ரவரி முதல், 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் பள்ளிகளை திறக்கப்படுவது உறுதியாகி உள்ளது.

எனினும், ஒன்றாம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு, பள்ளிகளை திறப்பது குறித்து, முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது.

Updated On: 27 Jan 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  3. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  4. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி
  6. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  8. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  9. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்