/* */

பாலிடெக்னி கல்லூரி சேரப்போகிறீர்களா? அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்கை குறித்த தேதியை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார்.

HIGHLIGHTS

பாலிடெக்னி கல்லூரி சேரப்போகிறீர்களா? அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
X

தமிழகத்தில் 1- 9 வரையிலான வகுப்புகளுக்கு தேர்வு முடிந்து கோடை விடுமுறையில் மாணவர்கள் உள்ளனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற 30ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில், பாலிடெக்னி கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பம் அளிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், தமிழகத்தில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம் என்றார்.

அதேபோல், பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நேரடியாக 2ம் ஆண்டு பாலிடெக்னிக் வகுப்புகளில் சேர்வதற்கான அட்டவணை வெளியிடப்படும் என்ற அவர், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இந்த ஆண்டு 10 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என்றார்.

பொறியியல் படிபுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அரசு பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், நீட் தேர்வு முடிவுக்குப் பின்னர் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி மேலும் தெரிவித்தார்.

Updated On: 27 May 2022 1:35 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...