/* */

என்சிஇஆர்டி புத்தகத்தில் எமர்ஜென்சி, குஜராத் கலவரம் பாடங்கள் நீக்கம்?

என்சிஇஆர்டி பாடப்புத்தகத்தில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரலாறு, அரசியல் அறிவியல் சமூகவியல் பாடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்.

HIGHLIGHTS

என்சிஇஆர்டி புத்தகத்தில் எமர்ஜென்சி, குஜராத் கலவரம் பாடங்கள் நீக்கம்?
X

2014 ல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து சமூக அறிவியல் பள்ளி பாடப்புத்தகங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டது. 2002 குஜராத் கலவரங்கள் பற்றிய குறிப்புகளை நீக்குதல், மக்கள் மற்றும் நிறுவனங்களின் மீது எமர்ஜென்சியின் கொடூரமான தாக்கத்தை கையாள்வதற்கான பத்திகளை கைவிடுதல், நர்மதா பச்சாவ் அந்தோலன், தலித் சிறுத்தைகள் மற்றும் பாரதிய கிசான் யூனியன் போன்ற போராட்டங்கள் மற்றும் சமூக இயக்கங்கள் பற்றிய அத்தியாயங்களை நீக்குதல் ஆகியவை மிகப்பெரும் மாற்றங்கள் ஆகும்.

பள்ளி பாடப்புத்தகங்களின் சமீபத்திய ஆய்வு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது. டிசம்பர் 15 அன்று, அப்போதைய NCERT இயக்குனர் ஸ்ரீதர் ஸ்ரீவாஸ்தவா, உள் மற்றும் வெளி நிபுணர்களை உள்ளடக்கி பாடநூல் மதிப்பாய்வைத் தொடங்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதினார்.

6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான தற்போதைய வரலாறு, அரசியல் அறிவியல் மற்றும் சமூகவியல் பாடப்புத்தகங்களை ஆய்வு செய்தது. மாணவர்களின் சுமையை குறைக்க அப்போதைய கல்வி அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் உத்தரவின் பேரில் 2019 இல் இரண்டாவது ஆய்வு தொடங்கப்பட்டது.

சமீபத்திய ஆய்விற்கான காரணம், கோவிட் இடையூறுகளால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் கற்றலில் "விரைவான மீட்சியை" பெற உதவும் வகையில் பாடத்திட்ட சுமையை மேலும் குறைப்பதாகும்.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) ஆறு மாதங்களுக்கு முன்பு அனைத்து பாடங்களுக்கும் மேற்கொண்ட பாடப்புத்தக ஆய்வின் விளைவாக இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது தேசிய பள்ளி பாடத்திட்டத்தின் (தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு அல்லது NCF) மறுசீரமைப்புக்கு முன்னதாக வருகிறது.


தற்கால இந்தியா தொடர்பான பாடங்களில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

குஜராத் கலவரம்

2002 குஜராத் கலவரம் பற்றிய குறிப்புகள் இரண்டு பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. முதலாவதாக, தற்போதைய 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தின் கடைசி அத்தியாயமான 'சுதந்திரத்திலிருந்து இந்தியாவில் அரசியல்' என்ற தலைப்பில் உள்ள கலவரங்கள் குறித்த இரண்டு முழுப் பக்கங்களும் நீக்கப்பட்டுள்ளன.

முதல் பக்கம், கரசேவகர்கள் நிறைந்த ரயில், அதைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக குஜராத் அரசை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விமர்சித்ததைக் குறிக்கிறது.

நீக்கப்பட்ட பத்தியில் கூறப்பட்டுள்ளது: "குஜராத் போன்ற நிகழ்வுகள், அரசியல் நோக்கங்களுக்காக மத உணர்வுகளைப் பயன்படுத்துவதில் உள்ள ஆபத்துகள் குறித்து நம்மை எச்சரிக்கின்றன. இது ஜனநாயக அரசியலுக்கு அச்சுறுத்தலாக உள்ளது"

தற்போது நீக்கப்பட்டுள்ள இரண்டாவது பக்கத்தில், கலவரம் பற்றிய மூன்று செய்தித்தாள் அறிக்கைகளின் தொகுப்பு, கலவரம குறித்து மனித உரிமைகள் ஆணைய அறிக்கை நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் புகழ்பெற்ற "ராஜ் தர்மம்" என்ற கருத்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அகமதாபாத்தில் அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் பக்கத்தில் அமர்ந்திருந்த செய்தியாளர் சந்திப்பில் வாஜ்பாய், குஜராத் முதலமைச்சருக்கு எனது ஒரு செய்தி, அவர் 'ராஜ் தர்மத்தை' பின்பற்ற வேண்டும் என்பதுதான். ஒரு ஆட்சியாளர் தனது குடிமக்களிடையே சாதி, மதம் மற்றும் மதத்தின் அடிப்படையில் எந்த பாகுபாடும் காட்டக்கூடாது என்று கூறினார்

எமர்ஜென்சி

12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்தில் எமர்ஜென்சி பற்றிய ஐந்து பக்கங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் எமர்ஜென்சியை குறித்த சர்ச்சைகள், இந்திரா காந்தி அரசு செய்த அதிகார துஷ்பிரயோகம் மற்றும் முறைகேடுகள் தொடர்பான செய்திகள் இடம்பெற்றிருந்தது. மேலும், அவசரநிலையின் கொடூரமான தாக்கம் பற்றிய குறிப்பும் நீக்கப்பட்டுள்ளது

தற்கால இந்தியாவில் சமூக இயக்கங்களாக மாறிய போராட்டங்களை விவரிக்கும் மூன்று அத்தியாயங்கள் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அரசியல் அறிவியல் பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, 12ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திலிருந்து மக்கள் இயக்கங்களின் எழுச்சி என்ற அத்தியாயம் நீக்கப்பட்டுள்ளது.

இந்த அத்தியாயத்தில், உத்தரகாண்டில் சிப்கோ இயக்கத்தின் பயணம், மகாராஷ்டிராவில் தலித் சிறுத்தைகளின் வளர்ச்சி, எண்பதுகளின் விவசாயப் போராட்டங்கள் போன்றவை இடம் பெற்றிருந்தன.

மத்தியப் பிரதேசத்தின் சத்புரா காடுகளின் இடம்பெயர்ந்த வனவாசிகளின் உரிமைகளுக்காக தவ மத்ஸ்ய சங்கம் எவ்வாறு போராடியது என்பதை விவரிக்கும் அத்தியாயத்தை 7 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்திலிருந்து நீக்கியுள்ளது.

மற்ற நீக்குதல்கள்

ஜவஹர்லால் நேரு

6ஆம் வகுப்பு வரலாற்றுப் பாடப்புத்தகத்தில் உள்ள 'அசோகர், போரைக் கைவிட்ட பேரரசர்' என்ற அத்தியாயத்திலிருந்து முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பேரரசர் அசோகர் பற்றிய மேற்கோள் நீக்கப்பட்டது.

12 ஆம் வகுப்பு சமூகவியல் பாடப்புத்தகத்தில் (இந்தியாவில் சமூக மாற்றம் மற்றும் வளர்ச்சி) 'கட்டமைப்பு மாற்றம்' என்ற அத்தியாயத்திலிருந்து பக்ரா நங்கல் அணை குறித்த நேருவின் கருத்துக்கள் நீக்கப்பட்டது.


பக்ரா நங்கல் அணை குறித்து நேரு கூறியது: இந்த அளவுக்கு உயரமான அணை உலகில் வேறு எங்கும் இல்லை என்று நமதுபொறியாளர்கள் சொல்கிறார்கள். நான் அந்தத் இடங்களை சுற்றிப்பார்த்தபோது வேலை சிரமங்கள் மற்றும் சிக்கல்களுடன் உள்ளது. மிகப் பெரிய கோயில், மசூதிகள், குருத்வாரா ஆகியவை மனித குலத்தின் நன்மைக்காக மனிதன் செயல்படும் இடம் என்று நினைத்தேன். ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மனிதர்கள் தங்கள் இரத்தத்தையும் வியர்வையும் சிந்தி உழைத்த இந்த பக்ரா நங்கல் அணையை விட பெரிய இடம் எது? என கூறியிருந்தார்

நக்சலிசம்

நக்சலிசம் மற்றும் நக்சலைட் இயக்கம் பற்றிய அனைத்து குறிப்புகளும் சமூக அறிவியல் பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. 1967 ஆம் ஆண்டு விவசாயிகள் எழுச்சி, நக்சலைட் சித்தாந்தவாதியான சாரு மஜும்தார் பற்றிய செய்தி இப்போது 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் நீக்கப்பட்டுள்ளது.

12 ஆம் வகுப்பு சமூகவியல் பாடப்புத்தகமான 'இந்தியாவில் சமூக மாற்றம் மற்றும் மேம்பாடு' அத்தியாயம் 8ல் உள்ள "விவசாயிகள் இயக்கம்" என்ற பகுதியில் இருந்து நக்சலைட் இயக்கம் பற்றிய குறிப்பு நீக்கப்பட்டுள்ளது.

உள் துறை வல்லுநர்கள் வெளிப்புற நிபுணர்களின் உதவியுடன் பாடங்கள் பற்றிய ஆய்வு மேற்கொண்டுள்ளனர், ஆனால் NCERT வெளியில் இருந்து சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடவில்லை.

Updated On: 18 Jun 2022 4:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  2. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  3. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  5. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  6. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  7. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  8. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  9. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு