திருச்சி என்ஐடி யில் ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் துவக்க விழா

திருச்சி என்ஐடி யில் ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் துவக்க விழா

திருச்சி என்ஐடி யில் ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் துவக்க விழா நடைபெற்றது.

திருச்சி என்ஐடி யில் ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் துவக்க விழா நடைபெற்றது.

இந்திய கல்வி அமைச்சகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பின் ஒரு பகுதியாக தேசிய தொழில்நுட்பக் கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தை தொடங்குவதற்கான அனுமதியை தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) முன்னெடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனத்தின் தென்மண்டல குழு திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்திற்கு ஒரு அலகு (50 இருக்கைகள் ) இடைநிலை அளவில் மாணவர் சேர்க்கைக்கான‌ அங்கீகாரம் வழங்கியது. இதன் மூலம் 2024-2025 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தேசிய பொது நுழைவுத்தேர்வு மூலம் தகுதியுள்ள மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த படிப்பிற்கான துவக்க விழா 01.10.2024 செவ்வாய்க்கிழமையன்று திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர். மு.கிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்நிகழ்விற்கு திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக இயக்குநர் முனைவர் அகிலா முன்னிலை வகித்தார். முனைவர்.சி.வேல்மதி, தலைவர் (ITEP) வரவேற்புரையாற்றினார். இறைவணக்கத்துடன் குத்துவிளக்கேற்றி நிகழ்வு தொடங்கியது.

இயக்குநர் அகிலா தனது தலைமையுரையில் ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்ட சேர்க்கை குழுவினரை பாராட்டி புதிதாக சேர்ந்த மாணவர்களை வரவேற்று வாழ்த்தினார். கல்வி புலத் தலைவர் முனைவர்.எஸ்.டி.ரமேஷ் ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தில் மூன்றாண்டு பி.எஸ்சி பட்டப்படிப்பு (கணிதம், இயற்பியல், வேதியியல்) மற்றும் நான்காண்டு பி.எஸ்சி, பி.எட் என சிறப்பு வாய்ப்புகள் இருப்பதை விளக்கினார்.

சிறப்பு விருந்தினர் முனைவர்.மு.கிருஷ்ணன் ஒன்றிணைத்தல், நிலைத்தன்மை மற்றும் தேசத்தை கட்டி எழுப்புவதில் ஆசிரியர்களின் பங்கு ஆகியவற்றை வலியுறுத்தினார். மேலும், மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பள்ளிகளில் கற்பிக்க தேவையான திறன்கள் மற்றும் அறிவை பெறுவதில் கவனம் செலுத்துமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பல்வேறு புலத்தலைவர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்கள் பங்கேற்று பாடத்திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் திட்டத்தின் தேவைகளை நிவர்த்தி செய்வதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பு குறித்து எடுத்துரைத்தார்கள். முனைவர் நா.ரவீந்திரன் நன்றியுரை ஆற்றினார். தேசிய கீதத்துடன் துவக்க விழா இனிதே நிறைவுற்றது.

Tags

Next Story
Similar Posts
குமாரபாளையம், JKKN கலை, அறிவியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
விஜய் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகை! யார்?
திருச்சி என்ஐடி யில் ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் துவக்க விழா
மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கோரிக்கை
உடல், மன நலம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு: 3 நாளில் அறிவிப்பு
தனித்துவ அடையாள அட்டையுடன் ஒரே நாடு ஒரே மாணவர் திட்டம்: மோடி அறிவிப்பு
மேச்சேரி: 7,000 மாணவர்களுக்கு ₹99 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு
கம்யூனிகேஷன் சான்றிதழ் இல்லாமல்   பாரதியார் பல்கலை ஆராய்ச்சி மாணவர்கள் தவிப்பு
ராசிபுரத்தில் குரூப் 2 தேர்வு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
தமிழக பள்ளிகளில் மாணவர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு நடத்த உத்தரவு
புதிய கல்வி கொள்கை ஏற்பு இல்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம்
வீட்டிலேயே 25 ஆயிரம் புத்தகங்களுடன் குடும்பம் நடத்தும் திருச்சி தம்பதியர்
நாடு முழுவதும் நவோதயா பள்ளிகளில் ஆறாம் வகுப்பு  அட்மிஷன் துவக்கம்