/* */

நவ. 1இல் பள்ளி திறப்பு இல்லை: தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு

தமிழகத்தில் , மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள், வரும் 1ம் தேதி திறக்கப்படாது என்று, தமிழக அரசு திடீரென அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

நவ. 1இல் பள்ளி திறப்பு இல்லை: தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு
X

கோப்பு படம்

கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்துள்ளதால், தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, கடந்த செப்டம்பர் 1-இல் இருந்து, 9-ம் வகுப்பு முதல், 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறன.

அதேபோல், நவம்பர் 1-ம் தேதியில் இருந்து, 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு நடைபெறும் என்று அரசு அறிவித்தது. இதையடுத்து, தற்போது பள்ளிகளை தயார்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்களுடன், நவம்பர் 1 முதல் மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்புக்கு மாறாக, தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி மழலையர், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் திறக்கப்படாது என, அரசு செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மழலையர், நர்சரி பள்ளிகளை தற்போதைக்கு திறக்கும் முடிவு இல்லை என, அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 23 Oct 2021 8:40 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  2. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  3. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  4. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  9. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்