திருச்சி முன்னாள் முதன்மை கல்வி அதிகாரி உள்பட 9 பேர் மீது லஞ்ச வழக்கு

திருச்சி முன்னாள் முதன்மை கல்வி அதிகாரி உள்பட 9 பேர் மீது லஞ்ச வழக்கு
திருச்சி மாவட்ட முன்னாள் முதன்மை கல்வி அதிகாரி உள்பட 9 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

இந்தியா போன்ற வளரும் நாட்டில், கல்வி என்பது வெறும் அறிவுசார் பரிமாற்றத்திற்கு அப்பாற்பட்ட முக்கியத்துவம் கொண்டது. தனிநபரின் வாழ்க்கையில் நல்வாழ்வுக்கும் மற்றும் தேசத்தின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் கல்வி அடிப்படையாகத் திகழ்கிறது. சிறந்த, அனைவரையும் உள்ளடக்கிய கல்வி முறையை வழங்குவதற்கான பொறுப்பில் மைய அரசு முக்கிய பங்கு வகிக்கிறது. வலுவான கல்விக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு மைய அரசின் கல்வி நிதி அவசியமான ஆதாரமாக உள்ளது.

மைய அரசின் கல்வி நிதி மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் (Ministry of Human Resource Development) மூலம் பல்வேறு திட்டங்கள் மற்றும் முயற்சிகளின் வழியாக நிர்வகிக்கப்படுகிறது. இந்த நிதிகள் பள்ளி கல்வி முதல் உயர்கல்வி வரையிலான கல்வி முயற்சிகளுக்கு ஆதரவாகப் பயன்படுத்தப்படுகின்றன. சர்வ சிக்ஷா அபியான் (Sarva Shiksha Abhiyan), இடைநிலை கல்விக்கான ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் (Rashtriya Madhyamik Shiksha Abhiyan), மற்றும் உயர்கல்விக்கான ராஷ்ட்ரிய உச்சதர் சிக்ஷா அபியான் (Rashtriya Uchchatar Shiksha Abhiyan -RUSA) ஆகியவை மத்திய அரசின் முக்கிய கல்வித் திட்டங்களில் அடங்கும்.

பின்தங்கிய மற்றும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வி அணுகலை அதிகரிப்பதே மைய அரசின் கல்வி நிதியின் முக்கிய குறிக்கோளாகும். கல்வி உரிமைச் சட்டம் சட்டத்தின் கீழ் உறுதிசெய்யப்பட்டுள்ள இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உதவியாக பாடப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் மதிய உணவு போன்ற சலுகைகள் இந்த நிதியிலிருந்து அளிக்கப்படுகின்றன. மேலும், ஆசிரியர் பயிற்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள ஆதரவுக்கும் மைய அரசின் கல்வி நிதி பெரிய அளவில் உதவுகிறது.

இந்த நிதி ஒதுக்கீடுகளால் ஏற்பட்டுள்ள நேர்மறையான தாக்கம் குறிப்பிடத்தக்கது. பள்ளி சேர்க்கை விகிதங்கள் குறிப்பாக ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி மட்டங்களில் அதிகரித்துள்ளன. கிராமப்புற இந்தியாவிலும் தலித் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகளின் கல்விச் சேர்க்கையும் கூடியுள்ளது. ஆசிரியர்களின் தரம் மேம்பட்டுள்ளது. பள்ளிகள் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்புகளைப் பெற்றுள்ளன. உயர்கல்விப் பிரிவில், புதிய கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டுள்ளன, ஆராய்ச்சிக்கான நிதி அதிகரித்துள்ளது.

இருப்பினும், இந்தியக் கல்வித்துறையின் முன்னேற்றம் நிலையானதாக இல்லை என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும். கல்விக்கான அரசின் செலவினங்கள் உலக நாடுகளின் சராசரியை விட குறைவாகவே உள்ளன. கிராமப்புறப் பகுதிகளில் உள்ள பள்ளிகளின் தரம் இன்னும் போதுமானதாக இல்லை. நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. சமூகத்தில் புரையோடிப் போயுள்ள ஏற்றத்தாழ்வுகள் பல ஆண்டுகளாக பின்தங்கிய சமூகங்களின் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளன.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் மத்திய அரசின் கல்வி நிதியின் முறைகேடு செய்ததாக கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்கள் என மொத்தம் 9 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மத்திய அரசு சார்பில் ஒருங்கிணைந்த கல்வி வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. பள்ளிகளில் ஆய்வக பொருட்கள் வாங்குவது உள்பட பல்வேறு விஷயங்களுக்காக இந்த நிதி செலவிடப்பட வேண்டும்.

இந்த நிதி மூலம் பள்ளி தலைமையாசிரியர்கள் மாவட்ட கல்வி அதிகாரிகள் அனுமதியுடன் பள்ளிகளுக்கு பொருட்களை வாங்குவார்கள். இந்நிலையில் தான் திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கல்வி வளர்ச்சி நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

அதாவது முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் திருச்சி முதன்மை கல்வி அலுவலராக அறிவழகன் என்பவர் இருந்தார். இவரும் சில தலைமையாசிரியர்களும் சேர்ந்து இந்த நிதியை தவறாக பயன்படுத்தி உள்ளனர். கொரோனா தடுப்புக்கான மாஸ்க் உள்ளிட்ட பொருட்களை வாங்கியதோடு, பள்ளிகளுக்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது.

இதுபற்றிய புகாரில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையை தொடர்ந்து திருச்சியில் முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றிய அறிவழகன், பள்ளி தலைமை ஆசிரியர்களாக இருந்த முத்துச்சாமி, சாந்தி, ராஜேந்திரன், சற்குணம், அகிலா, டெய்சி ராணி, ஜெய்சிங், கண்ணன் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் சாந்தி, ராஜேந்திரன் ஆகியோர் தற்போது கல்வி துறையின் இணை இயக்குனர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story