/* */

அவிநாசி அரசு கல்லூரியில் சர்வதேச வணிகத்துறை மாணவர் மன்ற துவக்க விழா

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சர்வதேச வணிக துறை சார்பில் மாணவர் மன்ற துவக்க விழா, கருத்தரங்கு நடைபெற்றது.

HIGHLIGHTS

அவிநாசி அரசு கல்லூரியில் சர்வதேச வணிகத்துறை மாணவர் மன்ற துவக்க விழா
X

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சர்வதேச வணிக துறை சார்பில் மாணவர் மன்ற துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. 

கருத்தரங்கு நிகழ்விற்கு வந்திருந்தோரை, 3ம் ஆண்டு மாணவி ஜோதிமீனால் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜோ. நளதம் தலைமையுரை வழங்கினார். முதலாமாண்டு மாணவர் சதீஷ், விருந்தினரை அறிமுகம் செய்தார்.


இதை தொடர்ந்து, சிறப்பு விருந்தினரான, சேகர் இன்ஜினியரிங் குழுமத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான ராஜசேகரன், மாணவர்கள் அனைவருக்கும் தனது தொழிலை பற்றியும், அதில் வேலை செய்யும் பணியாளர்கள் பற்றியும், ஒரு தொழில் எப்படி இருக்க வேண்டும் என்றும் முதலாளிகான தகுதிகள் குறித்து பேசினார்.


தன்னம்பிக்கை ஒன்றே மூலதனம் என்றும், விடாமுயற்சியும் செய்யும் தொழிலின் மீது அதீத ஈடுபாடு களுடன் பணி செய்ய வேண்டும் என்ற அவர், முதலாளி ஆவதற்கு வெறும் படிப்பு மட்டும் போதாது; அதீத அனுபவமும் வேண்டுமென்று என்றார்.


மற்றொரு விருந்தினரான, சக்தி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சக்திவேல், தொழில்முனைவோர் பற்றியும் , எத்தகைய தொழிலை தொடங்குவது எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்றும் விளக்கினார், விழாவின் முடிவாக சர்வதேச வணிக துறை தலைவர் செ. பாலமுருகன் நன்றியுரை வழங்கினார்.

Updated On: 19 May 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்