உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்தும் தொல்லியல் அகழாய்வு ஓராண்டு பட்டய படிப்பு

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்தும் தொல்லியல் அகழாய்வு ஓராண்டு பட்டய படிப்பு
X
இப்பட்டய வகுப்பு வார விடுமுறை நாளான ஞாயிறுதோறும் நேரடியாக ஓராண்டுக் காலம் நடைபெறும்.

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2022-2023-ஆம் ஆண்டிற்கான ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வுக்கான பட்டய வகுப்பு 2022 சனவரித் திங்கள் முதல் தொடங்கப்பட உள்ளது. இவ்வகுப்பில் கல்வெட்டியல், தொல்லியல் வழி தமிழக வரலாறு, மொழி. பண்பாடு, கலை, இலக்கியம் குறித்து அறிந்து கொள்வதற்கும், கல்வெட்டுப் படியெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்தலுக்கான பயிற்சியும் அளிக்கப்படும். இதில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பட்டய வகுப்பு வார விடுமுறை நாளான ஞாயிறுதோறும் நேரடியாக ஓராண்டுக் காலம் நடைபெறும்.

இப்பட்டய வகுப்பிற்கான விண்ணப்பத்தினை www.ulakaththamizh.in வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வகுப்புக்கான குறைந்தபட்சக் கல்வித் தகுதி பத்தாம் வகுப்புத் தேர்ச்சி. வயதுவரம்பு கிடையாது. சேர்க்கைக் கட்டணம் ரூ.3000/- ஆகும். சேர்க்கைக் கட்டணம் "இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்" (The DIRECTOR. International Institute of Tamil Studies) எனும் பெயரில் வங்கி வரைவோலையாக நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2021 திசம்பர் 31ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் நிறுவன முகவரிக்கு வந்து சேர வேண்டும். வகுப்புகள் தொடங்கப்பெறும் நாள். நேரம் போன்ற விவரங்கள் நிறுவன வலைதளத்தில் பின்னர் வெளியிடப்படும்.

விண்ணப்பம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு வந்து சேர வேண்டிய இறுதி நாள் 31.12.2021

அனுப்ப வேண்டிய முகவரி இயக்குநர்,

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

இரண்டாம் முதன்மைச்சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலகவளாகம்.

தரமணி, சென்னை-600113.

தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள்: 044-22542992, 9500012272

மின்னஞ்சல் : itstaramani@gmail.com

வலைத்தளம் : www.ulakaththamizh.in

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி