தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 45% அதிகரிப்பு

தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 45% அதிகரிப்பு
தமிழகத்தில் பள்ளிகளில் ஆர்டிஇ இடங்களுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 45 சதவீதம் அதிகரித்துள்ளது.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் சுமார் 45% அதிகரித்துள்ளன. 2023 ஆம் ஆண்டில் பெறப்பட்ட 1.1 லட்சம் விண்ணப்பங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு 1.58 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ்25 சதவீத இடஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த குழந்தைகள் கல்வி வழங்கப்படுகிறது.

நடப்பு கல்வி ஆண்டில் இந்த சட்டத்தின் கீழ் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஏப்ரல் 22ம் தேதி முதல் மே 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டு, 84,765 இடங்களுக்கு 1,74,756 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பிஎஸ்இ உள்ளிட்ட பிற வாரியங்களைப் பின்பற்றும் பள்ளிகளை தவிர்த்து மாநில பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த விண்ணப்பங்களை முதன்மை கல்வி அதிகாரிகள் மே 10 முதல் மே 27 வரை விண்ணப்பங்களை ஆய்வு செய்தனர். பின்னர், 1,57,767 விண்ணப்பங்கள் தகுதியானவை என்று கூறப்பட்டுள்ளன.

இதனைத்தொடர்ந்து விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பள்ளிகளுக்கு, மே 28 அன்று மாணவர்களைத் தேர்ந்தெடுக்க குலுக்கல் நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் துறையிடமிருந்து எஸ்எம்எஸ் அறிவிப்பைப் பெற்றனர். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பெயர்கள் அந்தந்த பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டன. இந்த மாணவர்கள் ஜூன் 3ம் தேதிக்குள் பள்ளிகளில் தங்கள் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும் என்றாலும், அரசுப் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக தனியார் பள்ளிகளில் அதிகம் செலவிட வேண்டியிருக்கும்.

இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை, சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் கூறுகையில், கல்வி உரிமைச் சட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளதையும், சிறந்த கல்வியை வழங்க தனியார் பள்ளிகள் மீது வளர்ந்து வரும் நம்பிக்கையையும் இந்த போக்கு காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தனியார் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஏ.என்.எஸ் பிரசாத் கூறுகையில், நகரங்களில் உள்ள மக்கள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தால் பயனடைந்தாலும், கல்வராயன் மலை போன்ற பழங்குடியினர் பகுதிகளில் உள்ளவர்கள் பின்தங்கிய நிலையில் உள்ளனர். இந்த பகுதிகளில் தனியார் பள்ளிகள் இல்லாததால், ஒரு பள்ளியின் ஒரு கி.மீ சுற்றளவில் உள்ளவர்கள் மட்டுமே இந்த சட்டத்தின் கீழ் ஒரு தனியார் பள்ளியில் சேர விண்ணப்பிக்க முடியும் என்ற விதி தானாகவே அவர்களை தகுதி நீக்கம் செய்கிறது. இந்த மாணவர்கள் கல்வி உரிமைச் சட்டத்திலிருந்தும் பயனடைவதை உறுதி செய்ய அரசாங்கம் விதிகளை மாற்ற வேண்டும் என்று கூறினார்.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்.டி.இ) விண்ணப்பங்கள் அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்த பொதுப் பள்ளி அமைப்புக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறுகையில், குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும்போது, அவர்களுக்கு சத்துணவு போன்ற அரசாங்க திட்டங்கள் மறுக்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.

Tags

Next Story