Norethisterone Tablet uses in Tamil நோரெத்திஸ்டெரோன் மாத்திரை பயன்பாடுகள் தமிழில்

Norethisterone Tablet uses in Tamil நோரெத்திஸ்டெரோன் பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்தாகும்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
Norethisterone Tablet uses in Tamil நோரெத்திஸ்டெரோன் மாத்திரை பயன்பாடுகள் தமிழில்
X

நோரெத்திஸ்டெரோன் என்பது ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு காரணமாக பெண்களுக்கு ஏற்படும் அசாதாரண இரத்தப்போக்கு மற்றும் மாதவிடாய் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்தாகும்.

தேவையற்ற கர்ப்பத்தைத் தடுக்க இது பிறப்புக் கட்டுப்பாட்டு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது சுமார் எட்டு வாரங்களுக்கு கருத்தடையை வழங்குகிறது. . இது குறுகிய கால கருத்தடைக்கான வசதியான மற்றும் பயனுள்ள வடிவமாகும்.

Norethisterone Tablet uses in Tamil பக்க விளைவுகள்

நோரெத்திஸ்டெரோன் முகப்பரு, ஒழுங்கற்ற மாதவிடாய் இரத்தப்போக்கு, அதிக முடி வளர்ச்சி, அதிகரித்த எடை, தோல் எதிர்வினைகள், மயக்கம், குமட்டல் மற்றும் குரல் மாற்றங்கள் போன்ற சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

மருந்தைத் தொடங்குவதற்கு முன் பின்வரும் பாதிப்புகள் உங்களுக்கு இருப்பதாக தெரிந்தால் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்:

  • நீங்கள் ஏற்கனவே கர்ப்பமாக இருக்கலாம் என்று எண்ணினால்.
  • உங்கள் தமனிகளில் ஏதேனும் கல்லீரல் பிரச்சினைகள் அல்லது சிக்கல் இருந்தால்.
  • கருப்பை நீர்க்கட்டி அல்லது ஏதேனும் அசாதாரண பிறப்புறுப்பு இரத்தப்போக்கு இருந்தால்.
  • மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால்.
  • எப்போதாவது ஒரு மருந்துக்கு ஒரு ஒவ்வாமை எதிர்வினை ஏற்பட்டிருந்தால்.

Norethisterone Tablet uses in Tamil எச்சரிக்கை



மாத்திரைகளை வரையறையில்லாமல் உட்கொண்டால், மாதவிடாய் ஏற்படுவது தற்காலிகமாக நின்றுவிடும் அல்லது மாதவிடாய்ச் சுழற்சியில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும்.

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே இந்த மாத்திரைகளைப் பயன்படுத்த வேண்டும்.

தோல் அரிப்பு, அலர்ஜி, நுரையீரல் நோய், மார்பகப் புற்றுநோய், நீரிழிவு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மருந்துகளை உட்கொள்ளக் கூடாது.

இந்த மருந்துகள் ஏற்படுத்தும் பின்விளைவுகளும் யாரெல்லாம் பயன்படுத்தக் கூடாது என்பதும் மருந்து அட்டையிலேயே பரிந்துரைக்கப்பட்டிருக்கும். மாத்திரைகளை உட்கொள்ளும் முன்பு, ஒருமுறை இந்தத் தகவல்களையும் பார்த்துக்கொள்ளவும்.

மாதவிடாயைத் தள்ளிப்போடும் மாத்திரைகளை எடுக்கும்போது ஆரம்பகால கட்டத்தில், வாந்தி வருவது போன்ற உணர்வு, மூச்சுத்திணறல், தலைவலி போன்றவை ஏற்படும். சிலருக்கு ஆழமான நரம்பு ரத்த உறைவு, உறைகட்டி, மார்பக வீக்கம் போன்ற தீவிரமான பின்விளைவுகளும் ஏற்படலாம்.

வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே இந்த மாத்திரைகளைப் பயன்படுத்த வேண்டும்.

மாதவிடாய் வருவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு, இந்த மருந்துகளைத் தொடர்ந்து ஐந்து நாள்களுக்குப் பயன்படுத்தலாம். அதன் பிறகு ஐந்து முதல் பத்து நாள்களுக்குள் மாதவிடாய் வருவதுதான் இயல்பு. அதற்குப் பிறகும் மாதவிடாய் தள்ளிப்போனால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்.

மைக்ரேன் தலைவலி இருப்பவர்கள், சீரான மாதவிடாய் இல்லாதவர்கள் இந்த மாத்திரைகளைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இந்த மருந்துகளை உட்கொண்ட பின்னர், நாள் தள்ளி வரும் மாதவிடாயின்போது, மைக்ரேன் தலைவலி வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. சீரான மாதவிடாய் இல்லாதவர்களுக்கு, மாதவிடாய் வரும் காலத்தில் அதிகமான உதிரப்போக்கும் ஏற்படலாம்

இந்த மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வாங்கி பயன்படுத்தக் கூடாது

Updated On: 1 Jun 2022 12:28 PM GMT

Related News