/* */

சீந்தில் மூலிகை பாதுகாப்பானதா? ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு

சீந்தில் மூலிகை பாதுகாப்பானது தான் என்று, மத்திய ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

சீந்தில் மூலிகை பாதுகாப்பானதா? ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு
X

சீந்தில் மூலிகை (கோப்பு படம்) 

சீந்தில் மூலிகை, ஆயுர்வேத சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. தினோஸ்போரா கார்டிபோலியா என்ற தாவரவியல் பெயர் கொண்ட இது, கூடுச்சி (Tinospora cordifolia) என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பாதுகாப்பு தன்மை குறித்து சமூக ஊடகங்களிலும், சில அறிவியல் இதழ்களிலும் கருத்துகள் வெளியாகி சர்ச்சைகள் எழுந்தன.

இதனையடுத்து, மத்திய ஆயுஷ் அமைச்சகம், ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், கூடுச்சி எனப்படும் சீந்தில் மூலிகை பாதுகாப்பானது. ஆனால், அதேபோன்ற தோற்றத்தில் காணப்படும் தினோஸ்போரா கிரிஸ்பா என்ற தாவரவியல் பெயர் கொண்ட தாவரங்கள், தீங்கை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.

கூடுச்சி எனப்படும் சீந்தில் மூலிகை ஆயுஷ் சிகிச்சையில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலிகை குறித்து பல ஆய்வு கட்டுரைகள் வெளியாகியுள்ளன. கல்லீரலை பாதுகாக்கும் இதன் குணங்கள், நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்த ஆயுர்வேத மருந்தை, பதிவு செய்யப்பட்ட ஆயுஷ் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, அது அறிவுறுத்தி உள்ளது.

Updated On: 5 Oct 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  4. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  5. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
  9. தேனி
    கொதிக்குது தேனி தண்ணீயாவது குடுங்க... இந்து எழுச்சி முன்னணி...
  10. ஆரணி
    ஆரணியில் வெவ்வேறு வழக்கில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேருக்கு ஆயுள்...