உங்களுக்கு பிரஷர், சுகர் இருக்கா? அப்போ, கரும்பு சாப்பிடுங்க...!

உங்களுக்கு பிரஷர், சுகர் இருக்கா? அப்போ, கரும்பு சாப்பிடுங்க...!

கரும்பில் நிறைந்திருப்பது இனிப்பு மட்டுமல்ல, ஆரோக்கியம் தரும் மருத்துவ பலன்களும்தான்!

பொங்கல் என்றாலே, மனதில் முதலில் தோன்றுவது பொங்கலிட்ட பானையும், தோகையுடன் கரும்புகளும்தான். ரத்த அழுத்த நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் கட்டாயம், அளவாக சாப்பிட வேண்டிய அற்புதமான ஒன்று கரும்புதான். அதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.

கரும்புச் சாற்றில் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைய காணப்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு விதமான பிரச்சினைகளை களைய உதவுகிறது. குறிப்பாக குளிர்காலங்களில் ஏற்படுகிற கல்லீரல் சம்பந்தமான பிரச்சினைகள், மஞ்சள் காமாலை, சிறுநீரக பாதை நோய்த்தொற்றுகள் போன்றவற்றை சரிசெய்ய கரும்பு உதவுகிறது.


பொங்கல் என்றாலே பொங்கலுடன் சேர்ந்து, நினைவுக்கு வருவது கரும்பு தான். கரும்பை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கரும்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இந்த கரும்பானது உலகம் முழுக்க பயிரிடப்படுகிறது. மேலும் கரும்பில் இருந்து வெள்ளை சர்க்கரை, பழுப்பு சர்க்கரை, வெல்லம் போன்ற பல்வேறு பொருட்களை பெற முடியும்.

இதில் இயற்கையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை தருகிறது. இதனாலேயே இது பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. பொங்கல் தினத்தன்று, ரசித்து சாப்பிடும் கரும்பின் மகத்துவமான நன்மைகளை நாம் அறிந்து கொள்வோம்.

​கரும்பின் ஊட்டச்சத்து அளவுகள்

28.35 கிராம் கரும்புச் சாற்றில் கீழ்க்கண்ட ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது.

கலோரிகள்- 113.43

புரதம்- 0.20 கிராம்

கொழுப்பு-0.66 கிராம்

கார்போஹைட்ரேட்டுகள்-25.40 கிராம்

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை விட கரும்பில் அதிக வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.இரும்புச் சத்து, மக்னீசியம் , வைட்டமின் பி1 (தியாமின்) ரிபோப்ளேவின் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகிறது.


​கரும்பில் டையூரிடிக் பண்புகள் அதிகளவில் உள்ளன. எனவே இது உடம்பில் உள்ள அதிகப்படியான உப்பு மற்றும் தண்ணீரை நீக்கி சிறுநீரகங்களை சரியாக செயல்பட வைக்க உதவுகிறது. லெமன் மற்றும் இளநீருடன் கரும்புச் சாற்றை சேர்த்து அருந்துவதால் பல வகையான சிறுநீர் பிரச்சினைகளை போக்க முடியும். சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலூட்டும் உணர்வை போக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

​ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கவும், பராமரிக்கவும் அத்தியாவசியமான ஆன்டி ஆக்ஸிடன்கள் அவசியம். இந்த ஆன்டி ஆக்ஸிடன்கள் கரும்பில் அதிகளவில் காணப்படுகிறது. இது நீரிழிவு நோய், மலேரியா, மாரடைப்பு மற்றும் சரும புற்றுநோய் போன்ற பிரச்சினைகளை மோசமாக்கும் ஆக்ஸினேற்ற அழுத்தத்தில் இருந்து செல்களை காக்கிறது. ஆன்டி ஆக்ஸிடன்கள் நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.

​சர்க்கரை பெரும்பாலும் எடை அதிகரிப்புடன் தொடர்புடையது என்றாலும், கரும்புச் சாற்றை உட்கொள்வது, எடை அதிகரிப்பை குறைக்க உதவுகிறது. மேலும் கர்ப்பிணி பெண்களின் மிதமான எடை அதிகரிப்புக்கு உதவுகிறது. கரும்புச் சாற்றை இஞ்சியுடன் சேர்த்து உட்கொள்வது காலை நோயை தடுக்க உதவி செய்யும். கர்ப்பிணி பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தியை தடுக்கவும் உதவி செய்கிறது.


நீரிழிவு நோயாளிகள் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை எடுப்பதை விட நேரடியாக கரும்பை எடுத்துக் கொண்டு வரலாம். கரும்பில் இருந்து எடுக்கும் வெல்லப்பாகு குளுக்கோஸை குறைக்கவும், இன்சுலின் உற்பத்தியை தடுக்கவும் உதவுகிறது. உயர் இரத்த அழுத்தத்திற்கு கரும்பை ஒரு சுத்திகரிப்பு மருந்தாக பயன்படுத்தி வரலாம்.


​கரும்பை அதிகளவில் உட்கொள்வது சில பக்க விளைவுகளையும் உண்டாக்குகிறது. இது இதய நோய் காரணமாக இறப்பை அதிகரிக்க உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

JAMA இன்டர்னல் மெடிசினில் 2014 ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, சர்க்கரையிலிருந்து சராசரியாக 20 சதவீத கலோரிகளை உட்கொள்பவர்கள், சர்க்கரையிலிருந்து 8 சதவீத கலோரிகளை உட்கொள்ளும் மற்றவர்களைக் காட்டிலும் இருதய நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பு 38 சதவீதம் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

​கரும்பு சர்க்கரைகள் அதிகம் உள்ள உணவு என்பதால் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், அதிக கொழுப்பு அளவுகள், எடை அதிகரிப்பு மற்றும் பல சிக்கலான பிரச்சினைகளை உண்டாக்குகிறது. எனவே அளவோடு கரும்புச் சாற்றை எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும்.

Next Story