செடிரிசைன் மாத்திரை பயன்பாடுகள் தமிழில்..

Cetirizine Tablet Uses in Tamil
Cetirizine Tablet Uses in Tamil
செடிரிசைன் மாத்திரை என்பது, அரிப்பு, தும்மல், மூக்கடைப்பு மற்றும் நீர்த்த கண்கள் போன்ற ஒவ்வாமை அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் மருந்து. இது படை நோய் காரணமாக ஏற்படும் வீக்கம் அல்லது அரிப்பு ஆகியவற்றிற்கு சிகிச்சை அளிக்க பயனுள்ளதாக உள்ளது.

சில ஒவ்வாமை ஏற்படுத்தும் காரணிகளால், உடல் ஹிஸ்டமைன் வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது. இந்த ஹிஸ்டமைன் தான் ஒவ்வாமைக்கு தொடர்புடைய அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.செடிரிசைன் மாத்திரை ஆன்டிஹிஸ்டமைனாக இருப்பதால் உங்கள் உடலில் இந்த இரசாயனத்தை குறைக்கிறது அல்லது தடுக்கிறது, இதன் மூலம் அதன் அறிகுறிகளில் இருந்து உங்களை விடுவிக்கிறது.
இந்த மருந்து உங்கள் அறிகுறிகளைக் குறைக்கலாம், ஆனால் தடுக்காது. இந்த மருந்தை மாத்திரை, கேப்சூல் அல்லது வடிவில் எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் உணவுடனோ அல்லது உணவு இல்லாமலோ இந்த மருந்தை எடுத்துக் கொள்ளலாம்.
மருந்தின் அளவை எடுத்துக்கொள்ளும்போது, விவரத்துணுக்கில் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும் அல்லது உங்கள் மருத்துவர் அளித்த அறிவுரைகளை பின்பற்றுங்கள்.
நீங்கள் அதிக அளவுகளிலோ அல்லது தேவைக்கு அதிகமான நாட்களோ இந்த மருந்தை எடுத்துக்கொள்ளக் கூடாது. உங்கள் உணவுடனோ அல்லது அது இல்லாமலோ இந்த மருந்தை எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் மெல்லக்கூடிய மாத்திரையாக இருந்தால், விழுங்குவதற்கு முன் அதை சரியாக மெல்லுங்கள். மேலும், ஒரு வேளை தவற விட்டால், உடனே இரு மடங்கு மருந்தினை எடுத்துக்கொள்ளாதீர்கள். அதிகமாக மருந்தின் அளவை எடுத்துக்கொண்டால் அமைதியின்மை அல்லது நரம்புத்தளர்ச்சி தொடர்ந்து அயர்வு போன்ற உணர்வுகள் ஏற்படலாம்;
இரண்டாம் தலைமுறை ஆன்டிஹிஸ்டமைனாக இருப்பதால், செடிரிசைன் மாத்திரை பக்க விளைவுகளை அதிகம் கொண்டிருக்கவில்லை. எனினும், அது வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, வாய் வறட்சி, சோர்வு மற்றும் அயர்வு போன்ற சில பக்க விளைவுகளை கொண்டிருக்கலாம். பொதுவாக இந்த மருந்து எந்த ஒரு ஆபத்தான பக்க விளைவை ஏற்படுத்தாது, ஆனால் உங்களுக்கு ஏதேனும் தொந்தரவு இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.
சிறுநீர் பிரச்சனை, பார்வையில் குறைபாடு, தூக்கமின்மை மற்றும் சீரற்ற இதயத்துடிப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட்டால், செடிரிசைன் மாத்திரை எடுத்துக்கொள்வதை நிறுத்தி விட்டு உடனே மருத்துவ உதவியை நாடுவது நல்லது.
சில முன்னெச்சரிக்கைகள்
நீங்கள் செடிரிசைன் மாத்திரை எடுத்துகொண்ட பிறகு நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய முன்னெச்சரிக்கைகள் உண்டு.

ஒரு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்றாலும், செடிரிசைன் மாத்திரை மயக்கம் ஏற்படுத்தலாம் மற்றும் பல்வேறு மக்களுக்கு பல்வேறு தரப்பட்ட எதிர்வினைகள் இருக்கலாம். குறிப்பாக மருந்தை எடுத்துக் கொள்ளும் ஆரம்பக் கட்டங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் மது அருந்துவதையும் அல்லது வானகம் ஓட்டுவதை தவிர்க்கவும்.
அம்மருந்துடனோ அல்லது அதில் பயன்படுத்தப்படும் வேறு ஏதேனும் உட்பொருட்கள் உடனோ ஒவ்வாமை இருப்பதாக தெரிந்தால் இந்த மருந்தை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும்.
நீங்கள் கர்ப்பமடைய திட்டமிட்டிருந்தாலோ அல்லது கர்ப்பமாக இருந்தாலோ, செடிரிசைன் மாத்திரை எடுத்துக்கொள்வதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகவும். இந்த மருந்து பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. மேலும், இந்த மருந்து தாய்ப்பாலின் மூலம் குழந்தைக்கு செல்லமுடியும் என்பதால், உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதைத் தவிர்க்கவும்.
சிறுநீரகம் அல்லது கல்லீரல் தொடர்பான ஏதேனும் நோய் இருந்தால், செடிரிசைன் மாத்திரை எடுத்துக்கொள்வதற்குள் உங்கள் மருத்துவரிடம் கேட்கவும்.
இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் பயன்கள் மற்றும் விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒவ்வாமை நிபுணர் / நோயெதிர்ப்பு நிபுணரை அணுகுவது நல்லது.
பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக எடுக்க வேண்டாம் அதிக அளவு மருந்தை எடுத்து கொள்வதால் உங்கள் அறிகுறிகளை சரிசெய்ய முடியாது, மாறாக அவை தீவிர பக்க விளைவுகள் உண்டாக்க காரணமாக இருக்கலாம்
பின்வரும் பிரச்சினைகள் இருந்தால் நீங்கள் செடிரிசைன் எடுத்து கொள்ள கூடாது
கடுமையான கல்லீரல் பிரச்சினை
கடுமையான சிறுநீரக பிரச்சனை
ஹைப்பர்சென்ஸ்டிவிட்டி
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu