தமிழகத்தில் 66 சதவீத பேருக்கு கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி

தமிழகத்தில் 66.2%பேருக்கு கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது. அதிகபட்சமாக விருதுநகரில் 84%, குறைந்த பட்சமாக ஈரோட்டில் 37% நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தமிழகத்தில் 66 சதவீத பேருக்கு கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி
X

கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி

தமிழகத்தில் 66 சதவீத பேருக்கு கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது. அதிகபட்சமாக விருநகரில் 84 சதவீதமும், குறைந்த பட்சமாக ஈரோட்டில் 37 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.

நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது இரண்டு வகையில் பெறப்படுகிறது. ஒன்று இயற்கையானது. மற்றொன்று செயற்கையானது. நோய் பாதிப்பு ஏற்படும்போது அதனை எதிர்க்க உடலிலுள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு போரிடும் செல்களை உருவாக்கும். இந்த செல்கள் உள்ளே நுழைந்துள்ள கெட்ட வைரஸ்களை அழிக்கும். இதன் காரணமாக நோய் விட்டு போகும். இது இயற்கையானது.

இதேபோன்று, தடுப்பூசி செலுத்தும்போது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்பட்டு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். பின்னர் வைரஸ்களை அவை அழிக்கும். அதனால் தான் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.

இயற்கையாக உருவாகும் எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை விட தடுப்பூசி மூலம் உருவாகும் எதிரான நோய் எதிர்ப்பு சக்திகளே அதிக காலம் நம் உடலில் இருக்கின்றன. இயற்கை முறையில் நான்கு மாதங்கள் நீடித்தால், தடுப்பூசி முறையில் ஒரு வருடம் நீடிக்கிறது. கொரோனாவுக்கு எதிராகவும் இதுபோன்ற எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கும்.

கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் உடலில் இந்த வகை எதிரான நோய் எதிர்ப்பு சக்தி தோன்றியிருக்கும். இதுதொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை மக்கள் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றலை பெற்றுள்ளார்கள் என்று ஆய்வு செய்யப்பட்டது.


இந்தியா முழுவதும் 70 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பரிசோதிக்கப்பட்ட்டனர். 11 மாநிலங்களில் குறைந்தது 3 ல் இரு பங்கு மக்கள் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை (ஆன்டிபாயாட்டிக்) பெற்றுள்ளனர் என்பது ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

இவற்றில் அதிக அளவாக மத்திய பிரதேசத்தில் 79% மக்கள் கொரோனாவுக்கு எதிரான எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளனர். இதில் மிக குறைவாக கேரளாவில் 44.4% மக்கள் மட்டுமே நோய் எதிர்ப்பு ஆற்றலை பெற்றுள்ளனர். இந்த விகிதம் தமிழகத்தில் 66% என்ற அளவில் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக விருநகரில் 84 சதவீதமும், குறைந்த பட்சமாக ஈரோட்டில் 37 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 31 July 2021 9:04 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே தோப்பூரில் வடமாநில தொழிலாளியிடம் வழிப்பறி- குத்திக்கொலை
  2. இந்தியா
    உத்தரகாண்ட் சுரங்கத் தொழிலாளர்களை மீட்க உதவிய ‘எலிவளை’ தொழில் நுட்பம்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் 108 ஆம்புலன்சில் பிறந்த இரட்டை...
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் அரசு பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு விருப்ப இடமாறுதல்...
  5. தென்காசி
    தென்காசி உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. காஞ்சிபுரம்
    செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு ஆயிரம் கன அடியாக
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் மற்றும் நீர் இருப்பு நிலவரம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் மற்றும் இருப்பு நிலவரம்
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் இன்று (புதன்கிழமை) மின்தடை
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை தீபத் திருவிழா; பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம்,...