/* */

காதல் மனைவியை கொன்ற கணவர் போலீசில் சரண் பரபரப்பு வாக்குமூலம்

காதல் மனைவியை கொன்ற  கணவர் போலீசில் சரண் பரபரப்பு வாக்குமூலம்
X

சுரண்டை அருகே காதல் மனைவியை கொன்ற அவரது கணவர் போலீசில் சரணடைந்தார். மேலும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உச்சி பொத்தை கிராமத்தைச் சேர்ந்த வேலுசாமி என்பவரது மகள் பூங்கோதை (22). இவர் திருப்பூரில் தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்த போது உடன் பணியாற்றிய ஒடிசாவை சேர்ந்த ஜோகிந்தர் என்ற வாலிபரை காதலித்து கடந்த 40 நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஊர் திரும்பிய அவர்கள் சுரண்டையில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ஜோகிந்தர் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். ஆனால் சரிவர வேலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 22ம் தேதி பூங்கோதையை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு ஜோகிந்தர் தப்பியோடினார்.இதுகுறித்து சுரண்டை இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி தலைமையிலான தனிப்படையினர் தலைமறைவான ஜோகிந்தரை தேடி வந்த நிலையில் சுரண்டைக்கு திரும்பிய ஜோகிந்தர், விஏஓ கருப்பசாமி முன்னிலையில் சுரண்டை போலீசில் சரணடைந்தார்.

அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் எனக்கு சரிவர வேலை கிடைக்காமல் வருமானம் இல்லாத நிலையில் என்னுடைய மனைவி பூங்கோதை அடிக்கடி அவரது பெற்றோரின் வீட்டுக்கு சென்று தங்கி விடுவார். இதனால் தனியாக வசித்த நான் சமைத்து சாப்பிட முடியாமல் அவதிப்பட்டு வந்தேன். அதனால் மனைவி பூங்கோதையிடம் எனது சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு சென்று வசிப்போம் என்று கூறினேன். ஆனால் அவர் என்னுடன் ஒடிசாவுக்கு வர மறுத்து விட்டார். இதனால் எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரத்தில் துணியால் மனைவியின் கழுத்தை இறுக்கி நெறித்து கொலை செய்தேன்.இவ்வாறு ஜோகிந்தர் வாக்குமூலத்தில் கூறியதாக தெரியவருகிறது.கைதான் ஜோகிந்தரை போலீசார் ஆலங்குளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Updated On: 31 Dec 2020 5:32 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  2. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  5. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  7. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  9. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  10. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...